பலாலி  – அச்சுவேலி பிரதான வீதி திறப்பின் போது உண்மையில் சுமந்திரன் கூறியது என்ன?

Misleading இலங்கை | Sri Lanka

INTRO

கடந்த நவம்பர் முதலாம் (2024.11.01) திகதி பலாலி  – அச்சுவேலி பிரதான வீதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் திறக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பான பதிவொன்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.

எனவே குறித்த பதிவின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விபரம் (what is the claim)

Facebook Link  | Archived Link 

குறித்த பதிவில் அச்சுவேலி வீதி திறக்கப்பட்டமை உயிரிழந்த தமிழ் போராட்டக்காரர்களுக்கு செய்யும் கௌரவம் – உணர்ச்சிவசப்பட்ட சுமந்திரன் எனும் தலைப்பில் சிங்கள மொழியில் தெரிவிக்கப்பட்டு 2024.11.04 ஆம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன் உண்மைத் தன்மை அறியாது பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த பதிவின் உண்மைத் தன்மையை ஆராயும் விதத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் அச்சுவேலி வீதி தொடர்பில் இவ்வாறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தால், அது பிரதான ஊடகங்களில் செய்தியாக வெளியாகியிருக்கும். எனவே அவ்வாறான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என்பது தொடர்பில் நாம் முதலில் ஆராய்ந்தோம்.

இதன் போது பிரதான ஊடகங்களில் அவ்வாறான செய்திகள் வெளியானமையை எம்மால் காணமுடியவில்லை.

எனினும் குறித்த பாதை திறக்கப்படுவதற்கு முன்னர் பலாலி – அச்சுவேலி பாதையை திறக்குமாறு சுமந்திரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தமை தொடர்பான செய்திகளை எமக்கு காணக்கிடைத்தது.

அது தொடர்பில் வெளியான செய்திகள் Link / Link / Link

மேலும் இது தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்களின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஏதேனும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளனவா என நாம் ஆராய்ந்தோம். 

இதன்போது கடந்த 2024.11.02 ஆம் திககி சுமந்திரன் அவர்களின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கதில் குறித்த வீதி திறக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்கவிற்கு நன்றி தெரிவித்து காணொளி ஒன்று பதிவேற்றப்பட்டிருந்தமையை எம்மால் அவதானிக் முடிந்தது. Link

சுமந்திரனின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த காணொளி

எனினும் குறித்த காணொளியில் எந்தவொரு இடத்திலும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப்  போன்று அச்சுவேலி வீதி திறக்கப்பட்டமை உயிரிழந்த தமிழ் போராட்டக்காரர்களுக்கு செய்யும் கௌரவம் என அவர் தெரிவித்திருக்கவில்லை என்பதனை நாம் அவதானித்தோம்.

இது தொடர்பில் மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களை தொடர்புகொள்ள முயற்சித்த போது எம்மால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. எனவே அவருடனான தொடர்பு கிடைத்தவுடன் குறித்த விடயம் தொடர்பில் அவரின் நிலைப்பாட்டை இந்த அறிக்கையில் நாம் இணைக்க காத்திருக்கின்றோம்.

மேலும் இது தொடர்பில் உண்மையை அறியும் நோக்கில் குறித்த பதிவில் இடப்பட்டிருந்த படத்தில்  A5 News  செய்தி நிறுவனத்தின் இலட்சினை இருப்பதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.

 எனவே அது தொடர்பில் நாம் A5 News      செய்தி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது. தாம் செய்திகளை அறிக்கையிட பின்பற்றும் வடிவமைப்பை பயன்படுத்தி கடந்த சில ஆண்டுகளாக போலியான செய்திகள் தயாரிக்கப்பட்டு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும் குறித்த செய்தி நிறுவனத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் சுமந்திரன் அவர்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட செய்திளை திரிபுப்பபடுத்தி இவ்வாறான போலியான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும். இது தமது நிறுவனத்தால வெளியிடப்பட்ட செய்தி அல்ல எனவும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.

குறித்த செய்தி நிறுவனத்தால் சுமந்திரன் தொடர்பில் வெளியான செய்தியை பார்வையிட

பலாலி – அச்சுவேலி பிரதான வீதி திறப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரையின் பிரகாரம் மூன்று தசாப்தங்களின் பின்னர் பலாலி – அச்சுவேலி பிரதான வீதியை கடந்த 2024.11.01 ஆம் திகதி திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

முப்பது வருடகால யுத்தம் காரணமாக இந்த பிரதான வீதி மூடப்பட்டதுடன், யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்களுக்கு மேலாகியும் இந்த வீதி பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்படவில்லை.

இந்த வீதியை திறப்பது தொடர்பில் வடமாகாண மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் ஆளுநர்களுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகமும் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன்படி, இந்த வீதியை திறப்பது தொடர்பிலுள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்திருந்ததோடு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் தலையீட்டின் பேரில் இந்த வீதியை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion:முடிவு

எனவே மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் குறித்த பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்ததனைப் போல் அச்சுவேலி வீதி திறக்கப்பட்டமை உயிரிழந்த தமிழ் போராட்டக்காரர்களுக்கு செய்யும் கௌரவம் என்ற விதத்திலான கருத்துக்களை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கவைில்லை எனவும் மாறாக குறித்த வீதி திறக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு நன்றி தெரிவித்த விடயம் தவறான புரிதலுடன் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளமையும் தெளிவாகின்றது.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:பலாலி – அச்சுவேலி பிரதான வீதி திறப்பின் போது உண்மையில் சுமந்திரன் கூறியது என்ன?

Fact Check By: Fact Crescendo Team 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *