
INTRO :
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் பகுதியில் திட்டமிட்ட கொள்ளை குழுவின் மூலம் கொள்ளை சம்பவம் இடம்பெறுவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” அறிவிப்பு!
கொழும்பு கட்டுநாயக்க தெமட்டகொட அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில்* *நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு அதிவேக நெடுஞ்சாலையில் எரிபொருளின்றி வாகனம் நின்றதாகக் கூறி பலர் உங்கள் வாகனத்தில் ஏற முயற்சிப்பார்கள்.*
*தயவுசெய்து அவர்களை அழைத்துச் செல்லவோ பேசவோ நிறுத்தாதீர்கள் அவர்கள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கொள்ளைக் கும்பல்…*
*உங்கள் உடைமை மற்றும் உயிருக்கு ஆபத்து வரலாம்…* “ என இம் மாதம் 19 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு (19.10.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் சமூகவலைத்தளங்களில் பரவிவருகின்ற குறித்த தகவல் தொடர்பாக யார் எனினும் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக செய்தி எதும் வெளியாகியுள்ளதா என ஆராய்ந்த போது அவ்விதமான எவ்வித செய்தியும் ஊடகங்களில் வெளியாகவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
பேலியகொட பிரதேசத்தில் இவ்வாறான கொள்ளைக் குழுக்கள் செயற்படுவதாகக் கூறப்பட்டதால், இது தொடர்பில் விசாரிப்பதற்காக பேலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் நாம் தொடர்புக்கொண்டு விசாரித்த போது, இரவு நேரங்களில் வாகனங்களில் ஏறி பணத்தை திருடும் கும்பல் தொடர்பில் முறைப்பாடு எதுவும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
தெமட்டகொட பிரதேசத்தில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் குழுவொன்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியதையடுத்து, அது தொடர்பில் தெமட்டகொட பொலிஸ் நிலையத்தில் விசாரித்த போது, அவ்வாறான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகள் எதுவும் பதிவாகவில்லை என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில்களுக்கு அருகில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் குழுவொன்று தொடர்பில் மேலும் உறுதி செய்துக்கொள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. நிஹால் தல்துவாவிடம் கேட்டோம்.
இதுவரையில் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலிருந்தும் அவ்வாறான தகவல் அல்லது சம்பவங்கள் இடம்பெற்றதாக பொலிஸ் பிரிவுக்கு அறிவிக்கப்படவில்லை எனவும், அவ்வாறான சம்பவம் இடம்பெற்றால் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில்களுக்கு அருகில் நடமாடும் பொலிஸ் சேவைகள் எப்பொழுதும் செயற்படுவதால், இவ்வாறான செயற்பாடுகள் அரிதாகவே காணப்படுவதாகவும், அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால், அது தொடர்பில் அவர்களுக்கு தெரிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்தார்.
இதற்கமைய மேற்குறிப்பிட்ட அதிகவேக நெடுஞ்சாலை நுழைவாயில் அருகில் கொள்ளையடிக்கும் கும்பலைக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட குறிப்புகள் தவறானவை என்று தெரிகிறது.
தன்னைப் பாதுகாத்துக் கொள்வது நல்லது தான் என்றாலும், இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் பொது மக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.
இது தொடர்பாக எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் பகுதியில் திட்டமிட்ட கொள்ளை குழுவா?
Fact Check By: S G PrabuResult: Misleading

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team