துருக்கியில் நிலநடுக்கத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள், அழுத குழந்தைக்கு பாலூட்ட முயன்ற சகோதரி ?

சமூக ஊடகம் சர்வதேசம் | International

INTRO :

சமீபத்தில் துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பெற்றோரை  இழந்த குழந்தைகள் எனவும் அழுகின்ற தன் உடன் பிறந்த குழந்தைக்கு பாலூட்ட முயன்ற சகோதரி என்று ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் “ கண்கள் பனிக்கின்றன. இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் இல்லை. துருக்கியின் சோகம்.

+++++++++++++++++++++++++++++++++

தந்தையே..! தாயே!.. தெரிந்திருந்தால் நாமும் உங்களோடு வந்திருப்போமே.??!!; எங்களை தனியாக விட்டுவிட்டு போய் விட்டீர்களே! நாம் என் செய்வோம்..?!

தன் உடன் பிறந்த குழந்தையை மடியில் வைத்து அழும் பிள்ளை. பசியால் அழும் குழந்தை.  அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தாயாரைப் பார்த்த பழக்கத்தில் குழந்தைக்கு பாலூட்ட முயலும் சகோதரி. கண்கள் குளமாகிறதே..!!!!???……

இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் இல்லை. நாமும் ஒரு நாள் இவ்வுலகை விட்டு சென்றே ஆக வேண்டும். இருக்கும் காலம் வரை நன்மையே செய்யுங்கள்.

நல்லதையே சிந்தியுங்கள். துருக்கியின் பூமி அதிர்வு உணர்த்திய பாடங்கள் இவை. “ என இம் மாதம் 14  ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (14.02.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலில் வீடியோவில் சில பகுதி காட்சிகளை புகைப்படமாக மாற்றி குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி ஆய்வு செய்த போது, குறித்த வீடியோ 2022 ஆம் ஆண்டு டிக்டொக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தாக பல சர்வதேச உண்மை கண்டறியும் ஊடகங்கள் மேற்கொண்டிருந்த ஆய்வறிக்கைகள் எமக்கு கிடைக்கப்பெற்றது.

எமது குழுவினர் குறித்த வீடியோவினை ஆய்வு செய்த போது, துருக்கியில் நடந்த சம்பவம் என பகிரப்படும் வீடியோவை ஒத்த வீடியோ என கண்டறியப்பட்டது.

நாமும் குறித்த டிக்டொக் கணக்கில் தற்போது அனைத்து வீடியோக்களும் அந்த பயனாளி நீக்கியுள்ளமை எம்மால் காணக்கிடைத்தது. 

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், துருக்கியில் நிலநடுக்கத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள், அழுத குழந்தைக்கு பாலூட்ட முயன்ற சகோதரி என பரவும் வீடியோ போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:துருக்கியில் நிலநடுக்கத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள், அழுத குழந்தைக்கு பாலூட்ட முயன்ற சகோதரி ?

Fact Check By: S G Prabu 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *