இதயத்தில் பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு ஒரு வாரத்திற்குள் இலவச அறுவை சிகிச்சை என கராப்பிட்டிய வைத்தியசாலை அறிவிப்பா?

Misleading இலங்கை | Sri Lanka


INTRO:  
இதயத்தில் பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு ஒரு வாரத்திற்குள் இலவச அறுவை சிகிச்சை என கராப்பிட்டிய வைத்தியசாலை அறிவித்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link  | Archived Link 

சமூக வலைத்தளங்களில் “ கராப்பிட்டிய வைத்தியசாலையின் அறிவிப்பு இதயத்தில் பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு ஒரு வாரத்திற்குள் இலவச அறுவை சிகிச்சை செய்பவர்கள் பெயர் விபரங்களை அறிவிக்கவும்.
இது ஒரு வெளிநாட்டு அணியால் செய்யப்படுகிறது NPP Social Network.” இம் மாதம் 01 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (01.11.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

கராப்பிட்டிய வைத்தியசாலையில் ஒரு வாரத்திற்குள் சிறுவர்களுக்கான இலவச இருதய சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதால், அவ்வாறான குழந்தைகளின் பெயர்களை பதிவு செய்யுமாறு வைத்தியசாலை அல்லது சுகாதார அமைச்சு பிரதான ஊடகங்கள் ஊடாக விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்ததா எனச் சோதித்தோம் ஆனால் அவ்வாறான விழிப்புணர்வை காணமுடியவில்லை.

கராப்பிட்டிய வைத்தியசாலையின் விளக்கம்:

இதன் காரணமாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.டி.யு.எம்.ரங்காவிடம் நாம் வினவியபோது, ​​இவ்வாறானதொரு செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், ஆனால் சத்திர சிகிச்சைக்காக சிறுவர்கள் ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்திற்குப் பொறுப்பான சிறுவர் இருதய சிகிச்சைப் பிரிவின் வைத்தியர் டொக்டர் ரணில் விதானகே, இத்திட்டமானது இங்கிலாந்தில் உள்ள Guy’s வைத்தியசாலையைச் சேர்ந்த விசேட வைத்திய நிபுணர் நாமல் கமகே ஆகியோர் இணைந்து வருடாந்தம் நடாத்தும் நிகழ்ச்சித் திட்டமாகும். இது குழந்தை இருதய நோய் நிபுணர் டாக்டர் கீத் சூரியசேனவால் ஒழுங்கமைக்கப்படுகின்றது என தெரிவித்தார்.

சிக்கலான மரபணு இதய நோய்கள் மட்டுமே இங்கு செய்யப்பட்டு, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நோயாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அடுத்த வாரத்தில் இருந்து இரண்டு வாரங்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கடந்த செம்டெம்பர் மாதத்தில் நமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வின் போது எமக்கு கராப்பிட்டிய வைத்தியசாலையினால் தெரியப்படுத்தினர்.

மேலும், இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில், கராப்பிட்டிய வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சை நிலையங்களுக்கு சிறுவர்கள் வந்து, அது தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை பெற்று வருவதுடன், பிள்ளைகளின் அறிக்கைகள் இங்கிலாந்தில் உள்ள Guy’s Hospital குழுவிற்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. அவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய குழந்தைகளைத் தேர்வு செய்கிறார்கள், இது திடீரென்று செய்யப்படுகின்ற ஒர் விடயமில்லை என எமக்கு அவர் கூறினார்.

எவ்வாறாயினும், கராப்பிட்டிய வைத்தியசாலையில் இதய நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்றைய தினம் இடம்பெற்று வருவதாக வைத்தியசாலையினால் தெரிவிக்கப்படவில்லை எனவும், இது தவறான தகவல் எனவும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் பலர் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், ஆனால் இதற்காக அதிகளவிலான பரிசோதனைகள் மற்றும் மதிப்பீடுகளை மேற்கொண்டு சத்திரசிகிச்சைக்கு தெரிவுசெய்யப்பட்ட பிள்ளைகளுக்கு சிக்கலான பிறவி இதய நோய் சத்திரசிகிச்சைகள் லேடி ரிட்ஜ்வே சிறுவர் சிறுமியர் விடுதியில் மேற்கொள்ளப்படுவதாகவும் மருத்துவர் மேலும் தெரிவித்தார். 

இங்கிலாந்தில் உள்ள Guy’s Hospital குழு கராப்பிட்டிய மருத்துவமனையில் ஆண்டுதோறும் இது போன்ற அறுவை சிகிச்சைகளை மேற்கொள்கிறது.

ஆனால் சில இதய நோய்கள் உள்ள பிள்ளைகள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் உள்ள கிளினிக்கிற்குச் செல்ல முடியும் எனவும், ஒவ்வொரு செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களிலும் காலை வேளையில் இந்த வைத்திய நிலையம் நடைபெறும் எனவும் வைத்தியர் ரணில் விதானகே குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2006 ஆம் ஆண்டு முதல், இந்த ஆங்கில மருத்துவக் குழு இலங்கைக்கு வந்து சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் போது, ​​அது குறித்து 2010 ஆம் ஆண்டு வெளியான செய்தியை பிரதான ஊடகம் இங்கு வெளியிட்டுள்ளது.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், கண்காணிப்பு பணிக்காக 25 மாவட்டங்களுக்கு தலா 10 பேர் விதம் ஜனாதிபதியால் நியமனம் என பரவும் தகவலில் உண்மைத்தன்மை இல்லை என கண்டறியப்பட்டது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:இதயத்தில் பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு ஒரு வாரத்திற்குள் இலவச அறுவை சிகிச்சை என கராப்பிட்டிய வைத்தியசாலை அறிவிப்பா?

Fact Check By: S.G.Prabu 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *