
INTRO :
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் என சில பதிவுகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “மகிந்த ராஜபக்ச வைத்தியசாலையில்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் திரு.மகிந்த ராஜபக்ச சுகவீனம் காரணமாக பல தடவைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சமீபத்தில் அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது..” என இம் மாதம் 04 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு (04.04.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருவதால், இதுபோன்ற செய்தி பிரதான ஊடகங்களில் செய்தியாக என்று நாங்கள் சோதித்தோம், ஆனால் அத்தகைய செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை.
எனவே, இதை உறுதிப்படுத்த மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகேவை நாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவியபோது, மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தவறானவை என்று மனோஜ் கமகே எமக்கு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி முழங்கால் அறுவை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது அவரது உடல்நிலை குணமடைந்துள்ளதாகவும், விஜேராமாவில் உள்ள தனது வீட்டில் நிம்மதியாக ஓய்வெடுத்து வருவதாகவும் அவர் மேலும் எமக்கு கூறினார்.
இன்று (ஏப்ரல் 04) தனது வீட்டில் எப்படி இருக்கிறார் என்பதைக் காட்ட, திரு. மஹிந்த ராஜபக்ஷ சிங்கள பத்திரிகையான ‘திவயின’ பத்திரிகையினை படிப்பதைக் காட்டும் புகைப்படத்தையும் எங்களுக்கு அனுப்பியிருந்தார்.
இது தொடர்பாக எமது குழவினர் நவலோக தனியார் வைத்தியசாலையினை தொடர்புக்கொண்டு வினவியபோது, அவர் தற்போது நவலோக வைத்தியசாலையில் சிகிச்சை பெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும், அவர் இதற்கு முன்பு ஒரு முறை நவலோக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், மகிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் என பரவும் தகவல்கள் போலியாக பகிரப்பட்டுள்ளமை என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:மகிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் என பரவும் தகவல்கள் உண்மையா?
Fact Check By: S.G.PrabuResult: False


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team