சீன இராணுவத்திடம் உயிர் பிச்சை கேட்கும் இந்திய ராணுவ வீரர் என பரவும் காணொளிகள் உண்மையா?

False சர்வதேசம் | International


INTRO :  

சீன இராணுவத்திடம் உயிர் பிச்சை கேட்கும் இந்திய ராணுவ வீரர் என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

 Facebook Link  | Archived Link


சமூகவலைத்தளங்களில் “சீனாவின் கட்டுபாட்டு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து உயிர் பிச்சை கேக்கும் இந்திய சங்கி ராணுவ வீரர் நர மேடியின் கையாலாகத தனத்தினாள் அப்பாவி இந்தியர்கள் சிக்கத் தவிக்கி்ன்றனர் “ என இம் மாதம் 08 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு  (08.05.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த காணொளியை நன்கு அவதானித்தால், இரு நாட்டு இராணுவ வீரர்கள் இடையே நாட்டு எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்நமை தொடர்பாக இடம்பெறும் வாக்குவாதமாக அமைந்திருந்தமை காணக்கிடைத்தது.

நாம் குறித்த காணொளியில் சில காட்சிகளை காட்சிகளை புகைப்படமாக மாற்றி அதனை ரிவ்ஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, இது கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் திகதி யூடியுபில் YB Vlog என்ற அலைவரிசை பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த காணொளியினை ஒத்திருந்தமை கண்டறியப்பட்டது.

நாம் குறித்த காணொளியில் தொடர்பாக மேலும் ஆய்வினை மேற்கொண்டபோது, இணையத்தளங்களிலும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் குறித்த காணொளியுடன் செய்திகள் வெளியாகியிருந்தமை காணக்கிடைத்தது.

Link 1 | Link 2 

இணையத்தில் வைரலாக குறித்த வீடியோ தொடர்பாக இதற்கு முந்தைய காலத்தில் பரவிய போலியான தகவல் தொடர்பாக சர்வதேச உண்மை சரிபார்க்கும் நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் எம்மால் காணக்கிடைத்தது. Link 1 | Link 2

இணையத்தில் வைரலாகின்ற குறித்த காணொளியில் குறிப்பிட்டதை போன்று, அவர்கள் பாகிஸ்தான் – இந்தியா இடையேயான எல்லை பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில் அவர்கள் சீனாவின் கட்டுபாட்டு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து உயிர் பிச்சை கேட்டகவில்லை என்பது உறுதியாகின்றது.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் சமீபத்தில் இடம்பெற்ற பாகிஸ்தான் – இந்தியா இடையேயான எல்லை பிரச்சினையின் போது சீன இராணுவத்திடம் உயிர் பிச்சை கேட்கும் இந்திய ராணுவ வீரர் என பரவும் காணொளி 2020 ஆம் காலக்கட்டதில் சீனா – இந்தியா எல்லையில் இடம்பெற்ற வாக்குவதத்தின் போது எடுக்கப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:சீன இராணுவத்திடம் உயிர் பிச்சை கேட்கும் இந்திய ராணுவ வீரர் என பரவும் காணொளிகள் உண்மையா?

Fact Check By: S.G.Prabu 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *