
INTRO :
எல்ல பேருந்து விபத்தில் மீட்பு பணிக்காக சென்ற ஒருவர் கையிறு அருந்து பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு என ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின்விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “ 💥Ai Picture | எல்லே பேருந்து விபத்தின் போது மீட்பு பணிக்காக சென்ற ஒருவர் கையிறு அருந்து பள்ளத்தில் விழுந்து இறந்தார்!
உண்மையில் அவருடைய மரணம் | 🥲. “என இம் மாதம் 05 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு (05.09.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
தங்காலை மாநகர சபை ஊழியர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து, எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் உள்ள ராவண எல்லவின் 15வது வளைவு பகுதியில் நேற்று இரவு (4) வீதியில் சென்று கொண்டிருந்த ஜீப் மீது மோதி, வீதியினை விட்டு விலகி ராவண எல்ல பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் 15 பேர் மரணமடைந்துள்ளதோடு, 18 பேர் காயமடைந்தனர். செய்தி 1 | செய்தி 2 | செய்தி 3
குறித்த சம்பவத்தின் போது உதவுவதற்காக சென்ற நபர் கையிறு அருந்து பள்ளத்தில் விழுந்து இறந்தார் என பரவும் தகவலினை உறுதி செய்ய நாம் பதுளை வைத்தியசாலையின் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷவிடம் விசாரித்தபோது, கயிறு அறுந்து விழுந்ததால் யாரும் இறக்கவில்லை என்றும், மேலும் குறித்த மீட்புப் பணியில் ஈடுபட்ட யாரும் இறக்கவில்லை எனவும் எமக்கு தெரிவித்தார்.
இது தொடர்பாக நாம் பல உள்ளூர் ஊடக நிருபர்கள் விசாரித்த போது, மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த யாரும் இறக்கவில்லை என்றும், பேருந்து விபத்தில் 15 பேர் மட்டுமே இறந்தனர் என எங்களிடம் உறுதிப்படுத்தினர்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இராணுவ வீரர்
முக்கிய ஊடக அறிக்கைகளின்படி, பேருந்து வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் விபத்து ஏற்பட்டதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், குறித்த பேருந்து விபத்தில் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அமர்ந்து விபத்தில் இருந்து உயிர் பிழைத்த இளைஞர், விபத்து ஏற்படுவதற்கு முன்பு பேருந்து பிரேக்கில் ஏதோ ஒரு கோளாறு இருந்ததாக பேருந்து ஓட்டுநர் கூறியதாகக் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வில், எல்ல பேருந்து விபத்தில் மீட்பு பணிக்காக சென்ற ஒருவர் கையிறு அருந்து பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு என பரவும் தகவல் தவறானது என்பது கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Title:எல்ல பேருந்து விபத்தில் மீட்பு பணிக்காக சென்ற ஒருவர் கையிறு அருந்து பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பா..?
Fact Check By: S.G.PrabuResult: False


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team