பாகிஸ்தானில் இலங்கை அணிக்கு பலத்த பாதுகாப்பு என பகிரப்படும் காணொளி உண்மையா..?

False விளையாட்டு | Sports


INTRO :

பாகிஸ்தானில் இலங்கை அணிக்கு பலத்த பாதுகாப்பு என சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின்விவரம் (What is the claim):

 Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில்“ 

பாகிஸ்தானில் இலங்கை அணிக்கு பலத்த பாதுகாப்பு!

https://adaderanatamil.lk/news/cmhxfgcyl01l6o29np14agc1i

WhatsApp இல் பின்தொடர : https://rb.gy/g9g2b…“என இம் மாதம் 14 ஆம் திகதி 2025 ஆம்ஆண்டு  (14.11.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

சமூகவலைத்தளத்தில் பகிரப்படுவதை போன்று இலங்கை அணிக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு வழங்கப்பட்டதா என ஆய்வினை மேற்கொள்ள நாம் குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவஸ் இமேஜீனை பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.

அதன்படி, அந்த காணொளி 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சியில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிக்காக வருகை தந்திருந்த வீரர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு என்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. 

இஸ்லாமாபாத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (11.11.2025) இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் 48 மணி நேரம் நிலவிய பரபரப்பான சூழ்நிலைக்குப் பின்னர் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு இந்தத் தொடரையும் அதன் பின்னர் மும்முனைத் தொடரையும் ராவல்பிண்டியில் தொடர  ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது. BBCTamil 


இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று (14) நடைபெற்றது, இலங்கை கிரிக்கெட் அணி ராவல்பிண்டி மைதானத்திற்கு பலத்த பாதுகாப்பை வழங்கியிருந்தது. அப்போது வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்து ஊடகங்கள் பின்வருமாறு செய்தி வெளியிட்டிருந்தன. Virakesari

Facebook

மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் உத்தியோகப்பூர்வ  சமூகவலைத்தள பக்கத்தில் இலங்கை வீரர்களை மைதானத்திற்கு வரவேற்கும் காணொளியும் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Instagram | Facebook 

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், பாகிஸ்தானில் இலங்கை அணிக்கு பலத்த பாதுகாப்பு என பகிரப்படும் காணொளி 2023 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிக்காக வருகை தந்திருந்த வீரர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு காணொளி  என கண்டறியப்பட்டுள்ளது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:பாகிஸ்தானில் இலங்கை அணிக்கு பலத்த பாதுகாப்பு என பகிரப்படும் காணொளி உண்மையா..?

Fact Check By: S.G.Prabu 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *