கொரோனா தடுப்பூசி சம்பந்தமாக சைபர் கிரைம் பொலிஸ் தகவல் வெளியிட்டதா ?

Misleading இலங்கை | Sri Lanka
A close-up of a virus

AI-generated content may be incorrect.


INTRO :  

கொரோனா தடுப்பூசி சம்பந்தமாக சைபர் கிரைம் பொலிஸ் வெளியிட்ட தகவல் என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

A screen shot of a computer

AI-generated content may be incorrect.

Facebook Link  | Archived Link


சமூகவலைத்தளங்களில் “அவசர தகவல்

தயவுசெய்து கவனிக்கவும்.

உங்களுக்கு அழைப்பு வந்து, நீங்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துள்ளீர்களா என்று கேட்டால், 1 ஐ அழுத்தவும்இல்லையென்றால், 2 ஐ அழுத்துவதற்கான விருப்பம் உங்களுக்கு வழங்கப்படும், ஆனால் நீங்கள் ஒன்று அல்லது இரண்டு எண்களை அழுத்தினால், உங்கள் மொபைல் செயலிழந்து, உங்கள் வங்கி முழுவதும் விவரங்கள் மறைந்துவிடும், நடக்கும். எனவே உடனடியாக அழைப்பை துண்டிக்கவும். முடிந்தவரை இந்த செய்தியை எல்லா இடங்களுக்கும் அனுப்புங்கள். எல்லா மொபைல்களிலும் விரைவாகப் பரவ வேண்டும்.

சைபர் கிரைம் போலீஸ்- “ என இம் மாதம் 09 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு  (09.06.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இது தொடர்பாக பிரதான ஊடகங்கள் செய்திகள் எதும் வெளிவந்துள்ளதா என ஆய்வினை மேற்கொண்டபோது, இவ்வாறான எவ்விதமான செய்திகளும் வெளியாகி இருக்கவில்லை.

நாம் இலங்கை பொலிஸ் ஊடகப்பிரிவினை நாம் தொடர்புக்கொண்டு வினவியபோது, இவ்வாறான எவ்விதமான முறைப்பாடுகளும் தமக்கு கிடைக்க பெறவில்லை எனவும், அத்துடன் குறித்த தகவல் போலியானது எனவும் எமக்கு தெரிவித்தனர்.

குறித்த தகவல் தொடர்பாக நாம் மேலும் ஆய்வினை மேற்கொண்டபோது,  கடந்த வருடம் எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வின் போது குறித்த தகவல் போலியானது என கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Link

இது தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் உண்மை சரிபார்க்கும் பிரிவினரால் கடந்த 2021 ஆம் ஆண்டே அவர்களின் உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் இது தொடர்பான அறிவித்தலினை வழங்கியிருந்தமையும் எம்மால் காணக்கிடைத்தது.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் கொரோனா தடுப்பூசி சம்பந்தமாக சைபர் கிரைம் பொலிஸ் வெளியிட்ட தகவல் என பரவும் தகவலானது போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கொரோனா தடுப்பூசி சம்பந்தமாக சைபர் கிரைம் பொலிஸ் தகவல் வெளியிட்டதா ?

Fact Check By: S.G.Prabu 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *