குஜராத் மாநிலத்தில் உள்ள பதான் படிக்கிணற்றை ராஜராஜ சோழன் தன்னுடைய மனைவிக்குக் கட்டிக்கொடுத்தான், என்று ஒரு பதிவு பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

யாழ் தீவகம் என்ற பேஸ்புக் கணக்கில் ”ராஜராஜ சோழன் தனது மனைவிக்காக கட்டிய கிணறு வடிவிலான பிரம்மாண்டமான அரண்மனை..

எத்தனை பேருக்கு தெரியும்?

தமிழன் திறமைக்கு இதுவே சான்று

தாஜ்மஹால் கட்டப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜ சோழன் தன் மனைவிக்காக கட்டிய கிணறு வடிவிலான பிரம்மாண்டமான ' அரண்மனை..குஜராத்திலுள்ள சித்பூர் என்ற ஊருக்கு அருகிலுள்ள பதான் கிராமத்தில் உள்ளது.. இதனுள் 9 கி்மீ.நீள சுரங்கப்பாதை.!!! நினைக்க நினைக்க ஆச்சர்யம் மட்டுமே மிஞ்சுகிறது..!!! எந்த இஞ்ஐினிரிங் காலேஜ்ல படிச்சி கட்டினாங்க!!! !! தமிழனின் சிறப்பை உலகறியச்செய்வோம்.....” என்று 2020, ஜூலை 13 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் குறித்த தகவலை உண்மை தன்மையினை கண்டறிவதற்கு Google Reverse Image Tool பயன்படுத்தி மேற்கொண்ட சோதனையின் போது,

queen's stepwell gujarat india என கண்டறியப்பட்டது.

அதாவது கூகுள் தேடுதல் தளத்தில் queen's stepwell gujarat india என காணப்பட்டது.

இதில், ராணி கி வாவ் (ராணியின் கிணறு) என்ற சொற்பதம் பயன்படுத்தப்பட்டிருந்தது. குறித்த இடம் குஜராத் மாநிலம் பதான் என்ற இடத்தில் சரஸ்வதி நதிக்கரை பகுதியில் உள்ளது. இதை கி.பி 1063ம் ஆண்டு தன்னுடைய கணவன் முதலாம் பீம்தேவின் நினைவாக ராணி உதயமதி கட்டியதாக கூறப்படுகிறது. 2014ம் ஆண்டு இதை உலக பாரம்பரிய நினைவுச் சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரித்தது.

எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் ராஜராஜ சோழன் காலத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழித்து இந்த கிணறு அமைக்கும் பணி நடந்துள்ளது என்று தகவல் தெரிவிக்கின்றன.

அப்படி இருக்கும்போது, கொஞ்சம் கூட தொடர்பே இல்லாமல் இந்த கிணற்றை தன்னுடைய மனைவிக்காக ராஜராஜ சோழன் கட்டினான் என்று தவறாகத் தெரிவித்துள்ளனர். உண்மையில் இந்த கிணற்றை தன்னுடைய கணவனின் நினைவாக ராணி உதயமதி கட்டினார்.

இதனால், இந்த கிணற்றுக்கு ராணியின் கிணறு என்று பெயர். இதன் மூலம், வேண்டுமென்றே தவறான தகவலைப் பரப்புவது தெரியவந்துள்ளது.

எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட சோதனையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Conclusion: முடிவு

உரிய ஆதாரங்களின் அடிப்படையில், கொல்கத்தாவில் உள்ள மியூசியம் வேறு, நாம் ஆய்வு செய்யும் வீடியோவில் உள்ள மியூசியம் வேறு என்று நிரூபித்துள்ளோம்.

Avatar

Title:ராஜராஜ சோழன் தனது மனைவிக்காக கட்டிய கிணறா இது?

Fact Check By: Nelson Mani

Result: False