
INTRO :
மஹாசிவராத்திரியை முன்னிட்டு அமெரிக்க விமானப்படையினர் விண்ணில் திரிசூலத்தினை இட்டு பெருமை படுத்தியதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Pathmanathan Nathan என்ற பேஸ்புக் கணக்கில் ” மஹாசிவராத்திரியை முன்னிட்டு அமெரிக்க AIR FORCE விண்ணில் திரிசூலத்தை இட்டு பெருமை படுத்தினர்…..” என இம் மாதம் 14 ஆம் திகதி (14.03.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது பலராலும் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
இணையத்தில் பதியப்பட்டிருந்த குறித்த புகைப்படத்தினை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இந்தியாவின் 67 ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு 2016 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் SU-30 MKI விமானத்தினை பயன்படுத்தி திரிசூலத்தை போன்ற அமைப்பில் விண்ணில் செய்யப்பட்ட சாகச வீடியோ எமக்கு கிடைக்கப்பெற்றது.
அந்த வீடியோ இருந்த திரிசூல அமைப்பு புகைப்படத்தினையும் இணையத்தில் பகிரப்படும் புகைப்படத்தினையும் நாம் ஆய்வுக்கு உட்படுத்தினோம் அதில் பல்வேறு வேறுபாடுகள் காணப்பட்டது.
நாம் fotoforensics.com இணையத்தில் குறித்த புகைப்படத்தினையிட்டு ஆய்வு செய்த போது இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.

எமது தேடலுக்கு அமைய, பேஸ்புக்கில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு அமெரிக்க விமானபடை விண்ணில் திரிசூலத்தை இட்டனர் என பகிரப்படும் தகவல் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:மஹாசிவராத்திரியை முன்னிட்டு அமெரிக்க விமானப்படை விண்ணில் திரிசூலம் ஏற்படுத்தியதா?
Fact Check By: Nelson ManiResult: Misleading