INTRO :
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் அது தொடர்பாக பல போலியான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைக்கின்றது.

இந்நிலையில் கொழும்பு மாவட்டத்தில் கடந்த மாதம் 29 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணனின் மகனுக்கு திருமண ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக சமூகவலைத்தளங்களில் சிலர் செய்தி பரப்பி வருவதை எமக்கு காணக்கிடைத்தது.

இதன் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Nuwan Taranga என்ற பேஸ்புக் கணக்கில் ” ஊரடங்கு சட்டத்தினை மதிக்காது கொழும்பு அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணனின் மகனுக்கு திருமணம்” என கடந்த மாதம் 30 ஆம் திகதி (30.10.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

எமது குழுவினர் பாராளுமன்ற உறுப்பினரான இராதாகிருஷ்ணனின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தினை ஆய்வு செய்த போது அதில் ” எனது ஒரே மகன் திவாகரனுக்கு இன்று ரமாடா ஹோட்டலில் திருமண வைபவம் நடைபெற்றது என்று கூறப்படும் செய்திக்கும் எங்கள் குடும்பத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என தெரிவித்துக் கொள்வதோடு இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் புகார் அளிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன், ” என்று குறித்த சம்பவம் தொடர்பில் பதிவேற்றம் செய்துள்ளார்.

Facebook | Archived

இது தொடர்பாக மேலும் நாம் ஆய்வினை மேற்கொண்டபோது, பாராளுமன்ற உறுப்பினரான இராதாகிருஷ்ணனின் மகனாக திவாகர் அவருடைய உத்தியோகப்பூர்வ பேஸ்புக் கணக்கில் ”தன்னுடைய திருமணத்தினை திட்டமிடும் முன் தனக்கு தெரியப்படுத்தினால் தயார் ஆகுவதற்கு இலகுவாக இருக்கும்.

மேலும் ஒருவருடைய பெயரினை சமூகவலைத்தளங்களில் உபயோகிக்கும் முன்னர் சற்று பொறுப்புடன் நடந்துக்கொள்ளுமாறு,’’ கேட்டுகொண்டுள்ளார்.

C:-Users-Prabuddha Athukorala-AppData-Local-Microsoft-Windows-INetCache-Content.Word-screenshot-www.facebook.com-2020.10.31-13_20_13.png

Facebook | Archived

இதுதொடர்பாக நாம் குறித்த ஹோட்டலுக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் தொடர்புக்கொண்டு வினவிய போது, இது தொடர்பாக அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் நாம் திவாகரன் இராதாகிருஷ்ணனை தொடர்புகொண்டு வினவியபோது, இது தொடர்பாக பொலிஸில் வாய் மூலம் முறைப்பாடு மேற்கொண்டுள்ளதாகவும், ஊரடங்கு நீக்கியதன் பின்னர் ஆவணங்களுடன் சென்று நேரில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக கொள்ளுப்பிடிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டு வினவியபோது, குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணனிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை, என்று தெரிவித்தார்.

நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய ஊரடங்கு காலத்தில் இராதாகிருஷ்ணனின் மகனுக்கு திருமணம் என வெளியான செய்திகள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:ஊரடங்கு காலத்தில் இராதாகிருஷ்ணனின் மகனுக்கு திருமணமா?

Fact Check By: Nelson Mani

Result: False