தென்னை மட்டைய ஓரம் போட்டுட்டு கோடு போட்டா என்ன? – உண்மை இதோ!

Partly False சர்வதேசம்

INTRO :
வீதியில் வெள்ளை கோடு போட்டவர் சரியாகப் போடவில்லை என புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

யாழ் தமிழன் வெற்றி என்ற பேஸ்புக் கணக்கில் ”  மூதேவி அந்த தென்னை மட்டைய ஓரம் போட்டுட்டு கோடு போட்டா என்னடா “ என இம் மாதம் 10 ஆம் திகதி (10.07.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

வீதியின் ஓரத்தில் இருந்த தென்னை ஓலையினை அகற்றாது அதனை வைத்து விட்டு வீதியில் கோடு போட்டுள்ள வீதி அபிவிருத்தி அதிகாரிகளை கலாய்த்து இந்த புகைப்படம் மீம்ஸ்களில் வலம் வந்தது.

இது தொடர்பாக நாம் தேடிய போது, இது திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம், மணியக்காரன்பட்டியில் அமைந்துள்ளது. அந்த வெள்ளைக்கோடு வளைந்து செல்லும் இடத்தில், வீதியிலேயே காவிரி குடிநீர் திட்டத்திற்கான குழாய் பதிக்கப்பட்டு வால்வு அமைக்க, சிறிய பள்ளம் தோண்டியுள்ளனர். 

இதனால், அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மோதி விழாமல் எச்சரிக்கும் வகையில், உள்ளூர் மக்கள், தென்னை ஓலை போட்டு அந்த பள்ளத்தை (தொட்டியை) மூடி வைத்துள்ளனர். 

எனவேதான், வீதி புணரமைக்கும் பணியாளர்கள் அதனை சுற்றி வளைத்துச் செல்வதைப் போல, வெள்ளைக் கோடு வரைந்துள்ளனர்.

இது குறித்து VNews27 தொலைக்காட்சி நிறுவனம் களத்திற்கு விஜயம் மேற்கொண்டு எடுத்த வீடியோ பதிவும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

மேலும் இணைய ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகள் எமக்கு கிடைக்கப்பெற்றன.

The Hindu Tamil Link


நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், குறித்த வெள்ளைக்கோடானது மக்களுக்கு பாதுகாப்பிற்காக போடப்பட்டது என்று உறுதியாகியுள்ளது.


எமது இந்திய தமிழ் பிரிவினர் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:தென்னை மட்டைய ஓரம் போட்டுட்டு கோடு போட்டா என்ன? – உண்மை இதோ!

Fact Check By: Nelson Mani 

Result: Partly False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *