கிழக்கு பல்கலைக்கழகத்தின் உறவுகள் யாழ் நோக்கி பயணமா?

False இலங்கை | Sri Lanka

INTRO :
யாழ் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவும் முகமாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் உறவுகள் யாழ் நோக்கி பயணம் என ஒரு புகைப்படத்தொகுப்பு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

யாழ்ப்பாணம்.com  என்ற பேஸ்புக் கணக்கில் ” யாழ் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டமையை அடுத்து நடந்துகொண்டிருக்கும் எதிர்ப்பு போராட்டத்தில் பங்குகொள்ள தமிழர் தாயகத்தின் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உறவுகள் யாழ் நோக்கி பயணம்!!

வடக்கும் கிழக்கும் எமது தாயகம்!🤝

#lanka”  என இம் மாதம் 09 ஆம் திகதி  (09.01.20201) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

பலரும் இதன் உண்மை தன்மையினை கண்டறியாமல் பகிர்ந்திருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

நாம் இது குறித்து பதிவில் இருந்த புகைப்படங்களை Google Reverse Image Tool பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டபோது, அவைகள் அனைத்தும் வெவ்வேறு நிகழ்வுகளுடன் தொடர்பு பட்டுள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.

இதில் பயன்படுத்தியுள்ள ஒரு புகைப்படமானது 2017 ஆம் ஆண்டு ரோயல் இன்பிலிட் ரசிகர்களால் மேற்கொள்ளப்பட்ட வாகன பேரணியின் போது எடுத்துக்கொள்ளப்பட்ட புகைப்படமாகும்.

motorcyclediaries.in| Archived link 

மற்றைய புகைப்படமும் இந்தியாவில் சுசூகி மோட்டோர்சைக்கிள் ஏற்பாட்டில் 2018 ஆம் ஆண்டு குறித்த பேரணி இடம்பெற்றுள்ளமை எம்மால் கண்டறியப்பட்டுள்ளது.

eventfaqs.com| Archived link 

நமக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களுக்கு அடிப்படையில், பேஸ்புக்கில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உறவுகள் யாழ் நோக்கி பயணம் என்று பகிரப்பட்டுள்ள புகைப்படங்கள் வெவ்வேறு நிகழ்வுகளுடன் தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டமையை அடுத்து நாட்டில் நிகழ்கின்ற பதற்ற சூழ்நிலையில் போலியான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கிழக்கு பல்கலைக்கழகத்தின் உறவுகள் யாழ் நோக்கி பயணமா?

Fact Check By: Nelson Mani 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *