அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காலமானதாக பரவும் செய்தி உண்மையா?
INTRO :
கடற்றொழில் அமைச்சாரான டக்ளஸ் தேவானந்தா காலமானதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் ” தீடீர் என சுகயினம் காரணமாக காலமானார் கண்ணீர் அஞ்சலி டக்ளஸ் தேவானந்தா ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றோம் “ என இம் மாதம் 12 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (12.01.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
மேலும் சிலர் தமது இரங்கலையும் குறித்த பதிவில் பதிவிட்டிருந்தமையும் காணக்கிடைத்து.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் இது தொடர்பாக பிரதான ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதா என தேடிய போது அவ்வாறான செய்திகள் எதுவும் வெளியாகி இருக்கவில்லை.
மேலும் நாம் அவரின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தினை ஆய்வு செய்த போது, அதில் இன்று வரை (17.01.2024) அவரின் அனைத்து நடவடிக்கைகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
இன்று காலை கல்மடு குளத்தில் 75000 மீன் குஞ்சுகளைப் விடுவிக்க சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காலமானதாக பரவும் செய்தி போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காலமானதாக பரவும் செய்தி உண்மையா?
Written By: S.G.PrabuResult: False