INTRO :

கண்டியில் பனிப்பொழிவு என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் “ snow in Kandy “ என இம் மாதம் 05 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு (05.03.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

https://www.tiktok.com/music/original-sound-7210459909745232641

மேலும் குறித்த பதிவின் கீழ் பலர் இது உண்மையான சம்பவமா என கேள்வி எழுப்பியிருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலில் குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்த இடத்தினை சரியாக அறிந்து கொள்ள நாம் கூகுள் மேப் உதவியுடன் குறித்த இடம் கெட்டம்பே, முதுகலை மருத்துவ நிறுவனத்திற்கு அருகில் அமைந்துள்ளது. மேலும் இது பேராதனை பொலிஸ் நிலையம் அருகிலேயே அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக எமது குழுவினர் வளிமண்டலவியல் திணைக்களத்தினை பிரதேச அதிகாரியினை தொடர்புக்கொண்டு கண்டியில் சமீபத்தில் பனிப்பொழிவு இடம்பெற்றதா என வினவிய போது, அவ்வாறு எவ்விதமான சம்பவமும் பதிவாகி வில்லை என தெரிவித்ததோடு, பனிப்பொழிவு ஏற்பட்டால் படத்தில் இருப்பது போன்று இருக்காது எனவும் தெரிவித்தார்.

மேலும் சில நேரங்களில் பனி மழை பெய்ததாகவும், ஆனால் அந்த பனி மழையால் புகைப்படத்தில் மற்றும் வீடியோவில் உள்ளவாறு பனியினை உருவாக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கண்டி பிரதேசவாசிகள் சிலரிடமிருந்து கருத்துக்களைப் பெற்றோம். இது தங்களுக்கு நன்கு தெரிந்த சம்பவம் என்றும், ரோபோரோசியா (roborosia) செடிகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் மழை பெய்யும் போது இந்த சம்பவத்தை காணலாம் என்றும் அவர்கள் எங்களிடம் தெரிவித்தனர்.

சாலைகளில் விழும் ரோபோரோசியா மரத்தின் சாறு, மழையால் நுரை பொங்குவது போல் காட்சியளிக்கும் என கூறினர்.

பேராதனைப் பிரதேசத்தில் இந்த நாட்களில் பனிப்பொழிவு இல்லை என்றும், பேராதனையின் கலஹ வீதியில் அமைந்துள்ள ரோபரோசியா செடிகள் இவ்வாறான விடயங்களுக்கு பங்களிக்கக்கூடும் என்றும் பேராதனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

கூடுதலாக, சாலைப் பரப்புகளில் வரிசையாக இருக்கும் வாகன எண்ணெய்கள் மழையால் தாக்கப்படும் போது இந்த பொதுவான நிகழ்வு ஏற்படுகிறது. ஒரு இரசாயன எதிர்வினை ஏற்படுகிறது இவை பனி போன்ற தோற்றமளிக்கும் நுரையை உருவாக்குகிறது.

எவ்வாறாயினும், பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு அருகில் உள்ள தளத்தின் சுற்றுப்புறத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம், இந்த குறிப்பிட்ட சம்பவம் மரங்களின் சப்போனின் (saponins) காரணமாக இருக்கலாம் என்று நாங்கள் பரிந்துரைக்க விரும்புகிறோம்.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், கண்டியில் பனிப்பொழிவு என பகிரப்படும் புகைப்படத்தில் உள்ளவாறு கண்டியில் பனிப்பொழிவு சமீபத்தில் ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கண்டியில் பனிப்பொழிவு என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: S G Prabu

Result: Misleading