
INTRO :
சமீபத்தில் நேபாளத்தில் இடம்பெற்ற விமான விபத்துடன் தொடர்புடையது என சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” நேபாள விமான விபத்து; பயணித்தோர் விபரம்
நேபாளத்தில் விபத்துக்குள்ளான ஜெட்டி ஏர்லைன்ஸ் விமானத்தில்
68 பயணிகளும் 4 பணியாளர்களும் இருந்துள்ளனர்.
பயணிகளில் 53 நேபாளிகள்,
5 இந்தியர்கள்,
4 ரஷ்யர்கள்,
2 கொரியர்கள்,
அயர்லாந்து(ஐரிஸ்),
ஆர்ஜென்டினா,
பிரெஞ்சு நாட்டவர்கள்
தலா ஒருவர் விமானத்தில் இருந்ததாக விமான நிலைய ஆணையகம் தெரிவித்துள்ளது. “ என இம் மாதம் 15 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு (15.01.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நேபாளில் இடம்பெற்ற விமானவிபத்து என கண்டறியப்பட்டது.
பங்களாதேஷில் இருந்து நேபாளத்தினை நோக்கி 71 பேருடன் சென்ற குறித்த விமானம், நேபாளத்தின் காத்மன்டு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியது.
இது தொடர்பாக வெளியாகிய செய்திகள் மற்றும் புகைப்படங்கள் எமது தேடலின் மூலம் கிடைக்கப்பெற்றது. குறித்த புகைப்படமானது, நேபாளத்தின் சமீபத்தில் இடம்பெற்ற விமான விபத்தின் புகைப்படம் என பகிரப்பட்டு வருகின்றமை எம்மால் உறுதி செய்யப்பட்டது.

usatoday Link | Archived Link | apnews.com | Archived Link
அதே போன்று பகிரப்படும் மற்றைய புகைப்படம் 2012 ஆம் ஆண்டு ஏற்பட்ட விமானவிபத்துடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டது.

மேலும் நாம் சமீபத்தில் நடைப்பெற்ற விமானவிபத்து தொடர்பான செய்திகளை ஆராய்ந்து பார்த்தபோது, Yeti விமானசேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், நேபாளத்தின் Pokhara என்ற இடத்தில் கடந்த 15ஆம் திகதி (15.01.2023) விபத்திற்கு உள்ளானது.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், நேபாளத்தில் சமீபத்தில் இடம்பெற்ற விமான விபத்தின் புகைப்படம் என பகிரப்படும் புகைப்படங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:நேபாள விமான விபத்து என பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையா?
Fact Check By: S G PrabuResult: False

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team