INTRO :

புகையிரத கழிவறையில் கைவிடப்பட்ட குழந்தை காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்களுக்கு பிறந்த குழந்தை என ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் “கடந்த வருடம் வெளிநாடுகளில் பணம் வாங்கிவிட்டு காளி முகத்திடல் அந்தப் பகுதியில் திருமணம் செய்யாத இளம் ஆண்கள் பெண்கள் மூலம் அதிகளவிலான பிள்ளைகள் பிறந்து ரயில் தெருவோரங்களில் விடுவார்கள் இன்னும் ஒரு வருடம் வரவில்லை தானே அடுத்தடுத்த மாதம் இதனுடைய பலனைக் காண முடியும் அந்தப் பகுதியிலிருந்த ஆண்களும் பெண்களும் மது அருந்தி உல்லாசம் அனுபவித்தார்கள் “ என இம் மாதம் 12 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு (12.03.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலில் புகையிரத்த கழிவறையில் கைவிடப்பட்ட குழந்தை தொடர்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குழந்தையின் உண்மையான பெற்றோர்கள் தொடர்பாக பிரதான ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகளை ஆய்வு செய்தோம். அதில் எதிலும் அவர்களின் அரசியல் கட்சி தொடர்பாக அல்லது காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என எவ்விதமான தகவலும் வெளியாகவில்லை.

அதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்ட கொஸ்லந்த பொலிஸ் நிலையத்திடமும், தாயை கைது செய்த பண்டாரவளை பொலிஸாரிடமும், இந்த பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களா என விசாரனை மேற்கொண்டோம்.

விசாரணையின் போது அவ்வாறான தகவல்கள் வெளியாகவில்லை எனவும், அவ்வாறான தகவல்கள் பொலிஸாரால் வெளிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸ் நிலையங்கள் உறுதி செய்தன.

கைது செய்யப்பட்ட தாயிடம் பண்டாரவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணை நடத்திய போது ஊடகங்களில் வெளியான வீடியோ இதோ…

Archived Link

மேலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் மேற்படி புகைப்படம் புகையிரதத்தில் கைவிடப்பட்ட குறித்த குழந்தையின் பெற்றோர் என்பதை சுட்டிக்காட்டி பகிரப்பட்டிருந்தமை எங்கள் கவனத்தை ஈர்த்தது, புகைப்படத்தில் உள்ள பெண் யார் என்பதை நாங்கள் சோதித்தோம்.

இது தொடர்பாக நாம் ஆய்வினை மேற்கொண்டபோது, குறித்த புகைப்படத்தில் உள்ள பெண் காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த சதுரங்கனி என்ற பெண் என்பதை கண்டறிந்தோம். மேலும் எமது குழு குறித்த பெண்னை தொடர்புக்கொண்டு இது தொடர்பாக வினவியபோது, தனது புகைப்படத்தினை தவறாக பயன்படுத்தி விளம்பரம் செய்யப்படுகின்றது என தெரிவித்தார்.

மேலும் “ கோடா கோ கம” காலி முகத்திடல் போராட்டத்தின் போது போராட்ட களத்தில் டிசர்ட் மற்றும் பேனர்கள் அச்சடித்தல், படங்கள் வரைந்தல் போன்ற விடயங்களில் தமது பங்களிப்பை அவர் வழங்கியதாக தெரிவித்தார்.

அத்துடன் குறித்த புகைப்படமானது, மே மாதம் 9 ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதலின் பின்னர் அவர் தனது கூடாரமின்றி மற்றொருவர் மடியில் தூங்குவதை காட்டும் புகைப்படம் எனவும், இது புகைப்படக்கலைஞர் ருவான் குணரத்னவினால் எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிவித்தார். Link | archived link

கடந்த வருடம் மே மாதம் 13 ஆம் திகதி தான் எடுத்த புகைப்படத்தினை தனது அனுமதியின்றி எடுத்து, குறித்த புகைப்படத்தினை பயன்படுத்தி சதுரங்கனியையும், பொதுப் போராட்டத்தையும் இழிவுபடுத்தும் முயற்சியை வன்மையாக கண்டிப்பதாக புகைப்படக்கலைஞர் ருவான் குணரத்ன தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் கணக்கில் பதிவிட்டிருந்த பதிவும் எமக்கு கிடைக்கப்பெற்றது. Link | archived link

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், புகையிரத கழிவறையில் கைவிடப்பட்ட குழந்தையின் பெற்றோர் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவரகள் என பரவும் செய்தி போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:புகையிரத கழிவறையில் கைவிடப்பட்ட குழந்தை தொடர்பாக பகிரப்படும் தகவல் உண்மையா ?

Fact Check By: S G Prabu

Result: False