
INTRO :
சமீபத்தில் மெக்சிகோவில் இஸ்ரேல் தூதரகம் போராட்டக்காரர்களால் தீ வைப்பு என ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “ பற்றி எரிகிறது மெக்சிகோவில் இஸ்ரேல் தூதரகம் போராட்டக்காரர்கள் தீ வைப்பு.அநியாயத்திற்கும் அக்கிரமித்துக்கும் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் உலகெங்கிலும் இருக்கும் இஸ்ரேலின் தூதரகங்களை தீ வைப்போம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆவேசமாக குரல்களை எழுப்பி உள்ளனர். ‼️
அடங்காத நெட் தனியாஹூ அரசாங்கம் அப்பாவி குழந்தைகள் பெண்கள் மீதும் வைத்தியசாலைகள் மீதும் வேண்டுமென்றே கொண்டு தாக்குதலை நடத்தி மனித இனத்தை கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது. ..‼️
ஐரோப்பா நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டும் அமெரிக்காவின் பூரண ஆதரவுடன் இஸ்ரேலின் இந்த வெறியாட்டம் நிகழ்கிறது. ‼️ “என கடந்த மாதம் 25 ஆம் திகதி 2025 ஆம்ஆண்டு (25.08.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மெச்சிகோவில் அமைந்துள்ள இஸ்ரயேல் தூதரகத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக சமீபத்தில் எந்த சர்வதேச ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டிருந்தமை எம்மால் காணக்கிடைக்கவில்லை.
ஆகவே நாம் குறித்த காணொளியினை புகைப்படங்களாக மாற்றி ஆய்வு செய்தபோது, இது கடந்த வருடம் மே மாதம் 29 ஆம் திகதி (29.05.2024) இடம்பெற்ற சம்பவம் என கண்டறியப்பட்டது. மேலும் இது தொடர்பான காணொளிகள் எக்ஸ் வலைத்தளத்தில் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
மெக்சிகோவில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர் என ILTV இஸ்ரேயல் நாட்டு ஊடகத்தில் வெளியாகி இருந்த செய்தியில் இதே காட்சி அடங்கிய காணொளி காணப்பட்டது.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வில், சமீபத்தில் மெக்சிகோவில் இஸ்ரேல் தூதரகம் போராட்டக்காரர்களால் தீ வைப்பு என பரவும் வீடியோ தவறானது என்பது கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Title:சமீபத்தில் மெக்சிகோவில் இஸ்ரேல் தூதரகம் போராட்டக்காரர்களால் தீ வைப்பா..?
Fact Check By: S.G.PrabuResult: Misleading


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team