‘’ அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்த மக்கள் கூட்டம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அயோத்தியில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.

நாடு முழுவதிலும் இருந்து ராம பக்தர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் இந்த நிகழ்வை நேரில் காண அயோத்தியில் குவிந்தனர்.

இந்நிலையில், அயோத்தி கோயிலுக்கு வந்த பக்தர்கள் கூட்டம் என்று கூறி மேற்கண்ட வகையில் ஒரு புகைப்படத்தை, சமூக வலைதளங்களில் சிலர் பரப்புகின்றனர்.

ஆனால், இது ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாத் கோயில் ரத யாத்திரையின்போது எடுக்கப்பட்ட படம் என்று தெரியவந்தது. 2023ம் ஆண்டு முதலே இந்த படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இதுதொடர்பான செய்தி ஆதாரங்கள் இதோ…

NDTV Link

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் ‘அயோத்தியில் எடுக்கப்பட்டதல்ல,’ என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்த மக்கள் கூட்டம்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Written By: Fact Crescendo Team

Result: False