நம் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாம் பயணிகள் உள்நாட்டினரால் தாக்கப்படும் மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் நாம் அறிந்திருக்கக் கூடும்.
அந்தவகையில் அவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான வெளிநாட்டவர் ஒருவரினால் வெளியிடப்பட்ட காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.
எனவே இந்த தாக்குதல் தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவரை இலங்கையர் ஒருவர் தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது கடந்த 2025.05.25 ஆம் திகதி பதிவேற்றப்பட்டுள்ளது.
மேலும் இந்த காணொளி தொடர்பான பின்னணி அறியாத பலரும் அதில் கமெண்ட் செய்திருந்தமையை எம்மால் காணமுடிந்து.


Explainer (விளக்கமளித்தல்)
எனவே சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்த காணொளி தொடர்பில் நாம் ஆராய்ந்த போது, கடந்த 24 ஆம் திகதி, TheLostJoey என்ற யூடியூப் சேனலில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சமூக ஊடக ஆர்வலர் ஒருவர் தான் இலங்கைக்கு விஜயம் செய்தபோது தனக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்கள் தொடர்பான காணொளியை வெளியிட்டிருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
இந்த காணொளியில் அவர் தென் மாகாண கடற்கரைப் பகுதியில் பயணம் செய்கின்றமையை காணமுடிந்தது. அத்துடன் அவர் அலைச்சறுக்கல் விளையாட்டில் ஈடுபடுவதற்காக surfing board ஒன்றை வாங்குவதற்காக கடையொன்றிற்கு செல்லும் போது அந்த கடையில் பணிபுரியும் இலங்கையரொருவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்திற்கு பின்னர் பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்தவரின் எதிர்ப்பையும் மீறி இலங்கையர் அவர் மீது தாக்குதல் நடத்துகின்றமையையும், அங்கிருந்து செல்லும் போது அவரை அந்த நபர் துரத்தி வருவதனையும் காணமுடிந்தது.
மேலும் இந்த காணொளியில் குறித்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் வெலிகம பொலிஸில் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளமையையும் காணக் கூடியதாக இருந்தது.

அத்துடன், சில ஊடகங்கள் இதனை சமீபத்திய சம்பவம் என்று செய்தி வெளியிட்டுள்ளன, இருப்பினும் மேலும் சில ஊடகங்களில் இது கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற சம்பவம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இது குறித்த உண்மையான தகவலை அறிவதற்காக வெலிகம பொலிஸ் நிலையத்திடம் தொடர்பு கொண்டு வினவியிருந்தோம்.
இதன்போது, 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி இந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியினால் வெலிகம் பொலிஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தனர். மேலும் வெலிகம பெலேன கடற்கரையில் உள்ள நீர் சறுக்கு பயிற்சி நிலையத்தில் காட்சிகளைப் பதிவு செய்யும் போது, அந்த இடத்தின் ஊழியர் ஒருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, வெளிநாட்டுப் பிரஜை அந்த ஊழியரினால் தாக்கப்பட்டதற்காகவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அதே நாளில், வெலிகம பெலேன பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய குறித்த சந்தேக நபரை வெலிகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்து மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், மேலும் இந்த வழக்கு இந்த ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளகொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்தாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இது தொடர்பாக இலங்கை பொலிஸின் பேஸ்புக் பக்கத்திலும் ஒரு பதிவு வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலம் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க இந்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து பின்வருமாறு
அதில் இந்த சம்பவமானது 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற ஒன்று எனவும், இது குறித்த முறைப்பாடு வழங்கப்பட்ட 2 மணித்தியாலங்களில் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் பிரிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok