
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் போர் ஏற்பட்டால் இலங்கை ராணுவம் சீனாவுக்கு உதவுவதாக இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்ததாக, ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

இராவணன் இராச்சியம் என்ற பேஸ்புக் கணக்கில் ” புலிகளை அழிக்க ஸ்ரீலங்காவிற்கு உதவிய இந்தியாவிற்கு விழுந்தது செருப்படி
என்ற பதிப்போடு அதில் பதிவேற்றம் செய்திருந்த புகைப்படத்தில் இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் புகைப்படம் அமைந்துள்ளதோடு அதில் செந்தமிழ் மலரவன் யாழ்ப்பாணம் என்ற பெயரில் ” சீனாவுக்கு இந்தியாவுடன் போர் ஏற்ப்பட்டால் இலங்கை சிங்கள ராணுவம் சீனாவுக்கு உதவும்… சிங்கள ராணுவ தளபதி சாவேந்திர சில்வா.. ” என்று பதியப்பட்டுள்ளது.
குறித்த பதிவேற்றமானது கடந்த மாதம் 29 ஆம் திகதி (29.05.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த செய்தி பலராலும் பகிரப்பட்டிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது குறித்து நாம் ஆய்வினை மேற்கொள்ள இலங்கை இராணுவ அதிகாரியினை தொடர்பு கொண்டு வினவிய போது, ’’குறித்த செய்தி முற்றிலும் போலியானது. இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வா இவ்வாறான கூற்றை முன்வைக்கவில்லை,’’ என்று எமக்கு விளக்கம் தெரிவித்தார்.
மேலும், நாம் இணையத்தில் குறித்த செய்தி வெளிவந்துள்ளதா என்று நாம் மேற்கொண்ட சோதனையின் போது, அவ்வாறான எவ்வித செய்தியும் வெளியாகி இருக்கவில்லை.
இதற்கமைய இலங்கை ராணுவம் சீனாவுக்கு உதவும் என இலங்கை இராணுவ தளபதி தெரிவித்ததாக வெளியான தகவல் போலியானது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இலங்கை ராணுவம் சீனாவுக்கு உதவும் என இலங்கை இராணுவ தளபதி தெரிவித்ததாக வெளியான தகவல் போலியானது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Title:இலங்கை ராணுவம் சீனாவுக்கு உதவும் என்று ராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறினாரா?
Fact Check By: Nelson ManiResult: False