
INTRO :
இமயமலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் பூ என்று ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Thoduwanam – தொடுவானம் என்ற பேஸ்புக் கணக்கில் “ இமயமலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் கம்பீரமான மலர் ” என கடந்த மாதம் 22 ஆம் திகதி (22.05.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
குறித்த புகைப்படங்களை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது இதில் காணப்படும் பூ Rheum nobile என்ற அழைக்கப்படும் பூ என கண்டறியப்பட்டது.

இது வடகிழக்கு ஆப்கானிஸ்தான் தொடங்கி மியான்மார் வரையிலான இமயமலைப் பகுதியில் வளரக்கூடியது எனவும் இது ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதம் பூக்கக்கூடியது என்று குறிப்பிட்டிருந்தனர்.

Link | Archived Link
குறித்த செய்தி 2019 வருடத்தில் ஆய்வினை மேற்கொண்ட எமது இந்திய தமிழ் பிரிவினரின் ஆய்வுக்கு அடிப்படையில், 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் பூக்கும் மலர் என்று எந்த ஒரு மலரையும் இதுவரை கண்டறியப்படவில்லை . இது குறித்து மேலும் வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய இமயமலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் என பகிரப்படும் தகவல் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இமயமலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலரா இது?
Fact Check By: Nelson ManiResult: False