ஞானவாபி மசூதி குளத்தில் சிவ லிங்கம் கண்டெடுக்கப்பட்டதா?

சர்வதேசம் | International

INTRO :
வாரணாசி ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” 400 ஆண்டுகளுக்குப் பிறகு கிணற்றிலிருந்து வெளியே வந்தார் காசி விஸ்வநாதர்.

முகலாயர் ஆட்சியில் கிணற்றுக்குள் போன காசி விஸ்வநாதர்

காசியில் ஞானவாபி மசூதியில்

கோர்ட் உத்தரவுப்படி ஆய்வு முடிந்து.

அங்குள்ள பெரிய கிணற்றின் நீரை இறைத்து வெளியேற்றிய போது 12.8 அடி உயரமுள்ள சிவலிங்கம் தெரிந்தது.

இப்போது வெளியே உள்ள பெரிய நந்திக்கு நேர் எதிரில் சிவலிங்கம் உள்ளது.

நந்தியம் பெருமானின் இடைவிடாத தவம் வெற்றி பெற்று விட்டது …

இது தான் 12 அடி லிங்கம் கண்டெடுக்கப்பட்ட காசி ஞானவாபி மசூதி “ என இம் மாதம் 19 ஆம் திகதி (19.05.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

வாரணாசி ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் என பரவுகின்ற புகைப்படத்தின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக ஆய்வினை மேற்கொண்டோம்.

குறித்த புகைப்படத்தினை நாம் கூகுள் ரிவஸ் இமேஜ் தேடலினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது இந்தியாவில் ஒடிஷா மாநிலத்தில் அமைந்துள்ள  12 அடி சிவலிங்கம் என்ற செய்தி எமக்கு கிடைக்கப்பெற்றது.

hindu-blog.com I Archive 1 I odikala.com I Archive 2

குறித்த சிவலிங்கம் ஒடிஷா மாநிலத்தில் பாலசோர் அருகே உள்ள பாபா புசண்டேஸ்வர் கோவிலில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஞானவாபி மசூதி விவகாரம் 2022 மே மாதம் மத்தியில் பல விவாதங்களை தோற்றுவித்துள்ளது. மே மாதம் 16 ஆம் திகதி 2022 இல் தான் மசூதியில் சிவலிங்கம் இருப்பதாகவும், அதனால் சிவலிங்கம் உள்ள பகுதிக்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றும் செய்திகள் வெளியானது.

bbc.com

இதன் பின்னர் ஞானவாபி மசூதியில் எடுக்கப்பட்ட படம் என்று ஒடிஷா சிவலிங்க படத்தை மக்கள் மத்தியில் தவறான கருத்தினை கொண்டுசெல்லும் விதமாக பகிரப்பட்டுள்ளமை ஆய்வின் மூலம் தெளிவாக கண்டறியப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ஞானவாபி மசூதி குளத்தில் சிவ லிங்கம் கண்டறியப்பட்டுள்ளது என பகிரப்படும் புகைப்படம்  போலியானது என உறுதி செய்யப்படுகிறது.

இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:ஞானவாபி மசூதி குளத்தில் சிவ லிங்கம் கண்டெடுக்கப்பட்டதா?

Fact Check By: S G Prabu 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *