
INTRO :
திருவள்ளுவரின் உண்மையான புகைப்படம் என சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” திருவள்ளுவரின் உண்மையான உருவம் “ என கடந்த மாதம் 24 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு (24.10.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் குறித்த புகைப்படத்தினை Yandex ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, புகைப்படம் தொடர்பான தகவல் எமக்கு கிடைக்கப்பெற்றது.

அதில் குறித்த புகைப்படம் திருநெல்வேலித் தென்னிந்திய சைவசிந்தாந்த நூற்பதிப்பக் கழகத்தார் வரைந்த ஓவியம் என்பது தெரியவந்தது.

கேமரா என்பது பயன்பாட்டிற்கு 1816 ஆம் ஆண்டின் பின்னரே பயன்பாட்டிற்கு வந்தநிலையில், 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருவள்ளுவரின் புகைப்படம் எவ்வாறு எடுக்க முடியும் என்பது தெரியவில்லை.
இதற்கமைய திருவள்ளுவரின் உண்மையான புகைப்படம் என பகிரப்பட்ட புகைப்படம் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team