நாட்டின் குழந்தைகளை நாம் முற்றாக அழிந்து விடுவோம் என சஜித் தெரிவித்தாரா?

Altered இலங்கை | Sri Lanka

Subscribe to our WhatsApp Channel


INTRO :

நாட்டின் குழந்தைகளை நாம் முற்றாக அழிந்து விடுவோம் என சஜித் அறிவித்ததாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):


Facebook Link 

சமூகவலைத்தளங்களில் “ “நாட்டின் குழந்தைகளை நாங்கள் முழு பலத்துடன் அழித்துக் கொண்டிருக்கிறோம்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச“ என இம் மாதம் 23 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (23.08.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

மேற்குறிப்பிட்ட சமூக வலைத்தள காணொளியில் கூறப்பட்டுள்ளவாறு அரசியல் தலைவர் ஒருவர் கருத்து வெளியிடுவார் என எதிர்பார்க்க முடியாவிட்டாலும், இதற்கான மூல அறிக்கையை ஆராய நடவடிக்கை எடுத்தோம்.

மேற்படி காணொளியை நன்கு ஆய்வுசெய்தபோது, சஜித் பிரேமதாசவின் பின்புறத்தில் இருந்த LED திரையில் அன்னம் சின்னம் காணப்படுவதை நாம் அவதானித்தோம்.

அதன்படி, இங்குள்ள அசல் காணொளி கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது ஆற்றப்பட்ட உரையின் ஒரு பகுதி என்பது தெளிவாகிறது. 2019 ஒக்டோபர் மாதம் கட்டுகம்பலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அப்போது புதிய ஜனநாயக முன்னணியின் தலைவராகப் போட்டியிட்ட சஜித் பிரேமதாச இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். 

“இந்த நாட்டில் தீவிரவாத பயங்கரவாதத்தை முற்றாக அழிப்போம், நாட்டின் எதிர்காலத்தையும், குழந்தைகளையும், வருங்கால சந்ததியினரையும் அழிக்கும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு நிச்சயம் முடிவொன்றை எடுப்போம்”

இதன் முழு வீடியோவும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பிரதான ஊடகங்களும் இதன் உண்மையான வீடியோவை வெளியிட்டு இருந்தன.

சமூகவலைத்தளங்களில் வெளியான வீடியோவில், “நாட்டின் குழந்தைகளை நாங்கள்  அழிக்கிறோம்” என்று எந்த ஒரு கருத்தும் அந்த வீடியோவில் இல்லை.

உண்மையான வீடியோ மற்றும் திருத்தப்பட்ட வீடியோவுக்கு இடையிலான ஒப்பீடு கீழே காணப்படுகின்றது.

எனவே இந்த உண்மையான வீடியோவை எடிட் செய்து தவறான கருத்து அர்த்தப்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது நமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், அநுர அரசாங்கத்தில் VAT வரி முழுமையாக நீக்கப்படும் என அறிவித்ததாக,  பரவும் தகவல் தவறானது, என்று கண்டறியப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:நாட்டின் குழந்தைகளை நாம் முற்றாக அழிந்து விடுவோம் என சஜித் தெரிவித்தாரா?

Written By: S G Prabu  

Result: Altered

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *