
INTRO: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே. எம். ஏ . ரஸாக்(ஜவாத்) நீக்கப்பட்டார் என்ற செய்தி, சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இந்த தகவல் பொய்யானது என்பதை, எமது அணியால் கண்டறியப்பட்டுள்ளது
தகவலின் விவரம் (What is the claim):
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவர் கே. எம். ஏ . ரஸாக் (ஜவாத்) குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பதான பகிர்வுகளை சமூக வலைத் தளங்களில் அவதானிக்க முடிந்தது. கடந்த ஒக்டோபர் 22 இல் , பகிரப்பட்ட முகநூல் பதிவு ஒன்றில் குறித்த தகவல் பின்வருமாறு பகிரப்பட்டிருந்தது. கல்முனை ஜவாத் நீக்கம் !
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – அம்பாறை மாவட்ட மத்திய குழு தலைவர் பதவியிலிருந்து – முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அம்பாரை மாவட்டத்தில் – தனித்து போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில் பக்கச்சார்பாக செயற்படுவதாக ஏனைய வேட்பாளர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு அமைய தலைவர் ரிஷாத் பதியுதீன் – இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். என்றே கூறப்படுகிறது.
மகா தலைவரின் – இந்த முடிவு பாராட்டத்தக்கது.
வட்டாரத்தை வெல்ல முடியோதாரை – மக்கள் காங்கிரஸில் இணைத்தது அறியாமை….
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் இணையத்தில் பகிரப்படும் தகவலுக்கு அமைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவர் குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டாதாக பிரதான ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதா என ஆய்வினை மேற்கொண்ட போது, அவ்வாறான எவ்விதமான செய்திகளும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை.
உண்மைத்தன்மை தொடர்பாக அறிவதற்காக , அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடகப்பிரிவைத் தொடர்புகொண்டு கேட்ட போது “இந்தச் செய்தி முற்றுமுழுதான பொய் பிரசாரமாகும், கடந்த சிலநாட்களாக இந்த தவறான செய்தியை சமூக வலைத்தளங்களில் அவதானித்தோம்” எனக் குறிப்பிட்டனர்.
தொடர்ந்து கட்சியின் மத்திய குழுவின் தலைவர் கே. எம்.ஏ.ரஸாக் (ஜவாத்) தரப்பை தொடர்புகொண்ட போது ” ஒரு குழுவினரின் திட்டமிடப்பட்ட பரப்புரையாக இதைப்பார்க்கிறேன். இதனைப் பற்றி பொதுவெளியிலும் உறுதிப்படுத்தியுள்ளேன். இது முற்றிலும் உண்மையற்ற செய்தி,’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கைக்கு அமைய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என பகிரப்படும் தகவலில் உண்மைதன்மை இல்லை என கண்டறியப்பட்டது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் உறுப்பினர் ஜவாத் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை என்பது எமது அணியால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டாரா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False
