பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகர் பிமல் ரத்நாயக்கவா?

False இலங்கை | Sri Lanka


INTRO:  

பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகர் பிமல் ரத்நாயக்க என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link  | Archived Link 

சமூக வலைத்தளங்களில் “புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஆகின்றார் பிமல் ரத்நாயக்க!

 10வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் திரு.பிமல் ரத்நாயக்க நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் NPPயின் தேசியப் பட்டியல் மூலம் அவர் போட்டியிட்டார்.

 2001 ஆம் ஆண்டு ஜனதா விமுக்தி பெரமுனாவை பிரதிநிதித்துவப்படுத்தி முதன்முதலில் பாராளுமன்றத்திற்கு தெரிவான திரு. பிமல் ரத்நாயக்க, மூன்று முறை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியதன் மூலம் பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் மரபுகள் பற்றிய விரிவான புரிதலையும் அனுபவத்தையும் பெற்றுள்ளார்.

 அத்துடன் 2004-2005 காலப்பகுதியில் தற்போதைய ஜனாதிபதி திரு அனுரகுமார திஸாநாயக்க விவசாயம், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக இருந்த போது, ​​திரு பிமல் ரத்நாயக்க அந்த அமைச்சின் பிரதி அமைச்சராகவும் இருந்தார்.

 அயல்நாட்டு அரசியல் கட்சிகளுடனும், ராஜதந்திரிகளுடனும் நீண்ட காலமாக கட்சியின் விவகாரங்களுக்காக கையாண்டு வரும் அவர் ஒரு சரியான அரசியல்வாதியும் கூட.” இம் மாதம் 16 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (16.11.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

பத்தாவது பாராளுமன்றத்தின்  முதலாவது அமர்வு கடந்த வியாழக்கிழமை (21.11.2024) நடைப்பெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினரான கலாநிதி அசோக ரன்வல சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அசோக ரன்வலவின் பெயரை முன்மொழிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வழிமொழிந்தார். 

இது குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த பதிவும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/BSqVCRDp7oY?si=wZLupCmCoYiH7cDV” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>

பத்தாவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக   வைத்தியர் கலாநிதி மொஹொமட் ரிஸ்வி சாலி தெரிவு செய்யப்பட்டார்.

சபாநாயகர் அசோக ரன்வல பிரதி சபாநாயகர் பதவிற்கு பெயரை முன்மொழியுமாறு சபைக்கு அறிவித்தார், அப்போதைய வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்ற உறுப்பினர் திரு. மொஹொமட் ரிஸ்வி சாலியின் பெயர் முன்மொழிய குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திருமதி சரோஜா சாவித்திரி போல்ராஜ் வழிமொழிந்தார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் முழுமையான நேரலையை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகர் பிமல் ரத்நாயக்க என பகிரப்படும் தகவல் தவறானது என்று  கண்டறியப்பட்டது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகர் பிமல் ரத்நாயக்கவா?

Written By: S G Prabu  

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *