
INTRO:
தாஜ்மாஹாலின் கட்டுமான பணிகளின் போது எடுக்கப்பட்ட காணொளி என சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூக வலைத்தளங்களில் “ கானக்கிடைக்காது கானொலி…… தாஜ்மஹால் கட்டியபோது…….. ”இம் மாதம் 21 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (21.12.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
17ஆம் நூற்றாண்டில் இந்தியா ஆக்ராவில் முழுவதும் பளிங்குக் கற்களால் இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டப்பட்டது.
இது 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. link
1816 ஆம் ஆண்டே Joseph Nicéphore Niépce என்பவரால் முதலாவது கமெரா கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. Link
இணையத்தில் வைரலாகியுள்ள காணொளியில் இருந்து சில காட்சிகளை நாம் புகைப்படமாக மாற்றி ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை செய்தபோது, Ai_Dance99 என்ற யூடியூப் சேனலில் கடந்த அக்டோபர் 30 ஆம் திகதி, “AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட தாஜ்மஹாலின் கட்டுமான பணிகள்” என்ற தலைப்பில் சமூகவலைத்தளங்களில் வைரலாகும் குறித்த காணொளியை பதிவிடப்பட்டுள்ளமை காணக்கிடைத்தது.
இதனை மேலும் உறுதி செய்துக்கொள்ள நாம் truemedia இல் இதனை பதிவேற்றி ஆய்வு செய்தபோது, இக்காணொளி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என ஆய்வுகளின் முடிவு தெரிவித்தது.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், தாஜ்மஹாலின் கட்டுமான பணிகளின் போது என பகிரப்படும் காணொளி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது என கண்டறியப்பட்டது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:தாஜ்மஹாலின் கட்டுமான பணிகளின் போது என பரவும் காணொளி உண்மையா?
Written By: S.G.PrabuResult: False


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team