INTRO:
இலங்கையில் HMPV நோய் தொற்றுடன் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக என சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூக வலைத்தளங்களில் “ இலங்கையில் HMPV நோய் தொற்றுடன் நபர் ஒருவர் கண்டி பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.”இம் மாதம் 08 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு (08.01.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இலங்கையில் ஹியூமன் மெட்டாப்நியூமோ வைரஸின் (HMPV) பாதிக்கப்பட்ட நபர் கண்டறியப்பட்டுள்ளதை பற்றி பிரதான ஊடகங்களில் ஏதேனும் செய்தி அறிக்கைகள் உள்ளதா என்பதை நாங்கள் முதலில் ஆய்வினை மேற்கொண்டோம்.
ஆனால் அவ்வாறு எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உயிரணு உயிரியல் பிரிவு பேராசிரியர் நீலிகா மாலவிகே அவ்வாறு தெரிவித்தாரா என நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.
சீனாவில் பரவுவதாக தெரிவிக்கப்படுகின்ற HMPV நோய் குறித்து நாட்டில் தேவையற்ற அச்சத்தினை சமூக ஊடகங்களின் மூலம் பரப்புவதாக நடத்திய ஊடகச்சந்திப்பில் போது, இலங்கையில் முதலாவது HMPV நோய் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்திருக்கவில்லை.
இந்த வைரஸ் உலகில் சுமார் 20 ஆண்டுகளாக இருப்பதாகவும், இலங்கையில் இந்த வைரஸ் அவ்வப்போது தோன்றியதாகவும், 2023 டிசம்பரில், HMPV வைரஸ் இருந்ததாகவும், அக்காலக்கட்டத்தில் அது மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் குறித்த ஊடகசந்திப்பில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு கண்டி வைத்தியசாலையில் வைரஸ் நிபுணர் திருமதி அதீகா ஹக்ரத்தினால், இந்த வைரஸ் தொற்றுடன் நோயாளிகளை அடையாளம் காணப்பட்டதாகவும், இது இலங்கைக்கு புதிய வைரஸ் அல்ல என்பதோடு, இது ஒரு சாதாரண வைரஸ் நிலைமை என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஏனைய வெளிநாடுகளில் குளிர்காலம் என்பதால் இந்த வைரஸ் மாத்திரமன்றி சுவாச அமைப்பு தொடர்பான வைரஸ்களும் தோன்றி உலகம் முழுவதும் பரவி வருவதாக திருமதி நீலிகா மாலவிகே தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த வருடம் இலங்கையில் HMPV வைரஸால் பாதிக்கப்பட்ட எவரும் இனங்காணப்படவில்லை என அவர் குறிப்பிடுகிறார்.
இது தொடர்பில் நாம் பேராசிரியர் நீலிகா மாலவிகேவிடம் வினவியபோது, HMPV வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நோயாளி கண்டுபிடிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் தகவல்கள் தவறானது எனவும், இந்த நோயாளர்கள் நீண்ட காலத்திற்கு முன்னர் இலங்கையில் காணப்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இலங்கையில் HMPV நோய் தொற்றுடன் நபர் அடையாளம் காணப்பட்டார் என பகிரப்படும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team