
INTRO:
USAID நிதியைப் பெற்றுக் கொண்ட அரசியல் பிரதிநிதிகள் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூக வலைத்தளங்களில் “ இலங்கையில் சனத் தொகையை குறைப்பதற்கும் LGBTயை ஊக்குவிப்பதற்க்கா USAID நிதியைப் பெற்றுக் கொண்ட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சில ஊடகம் சார்ந்தவர்கள்……”இம் மாதம் 11 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு (11.02.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
சமூகவலைத்தளங்களில் பரவுகின்ற குறித்த பெயர் பட்டியல் தொடர்பாக தகவல்கள் அமெரிக்காவின் DOGE- Department of Government Efficiency, USAID அல்லது வேறு எந்த அமெரிக்க அரசாங்க நிறுவனத்திடமிருந்தும் வெளியிடப்பட்டுள்ளதா என நாம் ஆய்வினை மேற்கொண்டபோது, எந்த அதிகாரப்பூர்வ ஆதாரங்களையும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதேபோல், இது சம்பந்தமாக, எந்தவொரு பிரதான சர்வதேச ஊடக நிறுவனமோ அல்லது உள்ளூர் ஊடக நிறுவனமோ மேலே உள்ள பட்டியலில் உள்ள நபர்களுக்கு USAID நிதி வழங்கியதாகக் குறிப்பிடவில்லை.
இலங்கை பற்றி DOGE உண்மையில் என்ன தெரிவித்தது?
இலங்கை தொடர்பாக DOGE ஆல் உறுதிப்படுத்தப்பட்ட ஒரே நடவடிக்கை, நாட்டில் பாலினம் மற்றும் ஊடகம் தொடர்பான திட்டங்களுக்கான USAID நிதியுதவி வழங்கியுள்ளதாக தெரிவித்திருந்தனர்.
பாலின-நடுநிலை ஊடகப் பயிற்சிக்கான USAID நிதியுதவி பெற்ற இலங்கைத் திட்டம் உட்பட பல திட்டங்களை எலோன் மஸ்க் தனிப்பட்ட முறையில் விமர்சித்துள்ளார்.
இதை அவர் தனது ‘X’ கணக்கில் “வரி செலுத்துவோர் பணத்தை வீணடிப்பது” என பதிவிட்டிருந்தார். இருப்பினும், அவர் வழங்கிய ஆவணத்திலோ அல்லது எந்தவொரு அதிகாரப்பூர்வ அமெரிக்க அறிக்கையிலோ இலங்கை அரசியல்வாதிகள் அல்லது இலங்கையை சார்ந்த பிரபலங்கள் USAID மூலம் அரசியல் நிதி பெறுவது பற்றி குறிப்பிடப்படவில்லை, அல்லது அவர்களின் பெயர்களும் குறிப்பிடப்படவில்லை.
எலோன் மஸ்க் பகிர்ந்து கொண்ட ஆவணத்தின்படி, ஜனநாயக இலங்கைக்கான ஊடக அதிகாரமளித்தல் (MEND) திட்டத்திற்காக USAID தோராயமாக $7.9 மில்லியன் ஒதுக்கியுள்ளது. ஈராக்கில் ஒரு புதிய தெரு நிகழ்ச்சிகள் மேற்கொள்ள $20 மில்லியன், கஜகஸ்தானில் “தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதற்காக” $4.5 மில்லியன் மற்றும் பெண்ணிய ஜனநாயகக் கொள்கைகளை பிரதிபலிக்கும் வகையில் டிஜிட்டல் யுகத்திற்கு மாற்றுவதற்கு $6 மில்லியன் உட்பட, உலகளாவிய அளவில் பல திட்டங்களுக்கு USAID எவ்வாறு நிதியளித்தது என்பது குறிப்பிடப்பட்டிருந்தது.
பண வீண் விரயத்திற்கான 199 ஒப்பந்தங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் மூலம் 250 மில்லியன் டொலர்களை மிச்சப்படுத்திய திட்டங்களாக பட்டியலிட்ட DOGE X குறிப்பு, “ஆசியா பசிபிக் – இலங்கை காலநிலை மாற்றக் குறைப்பு சேவைகள் தழுவல் மற்றும் மீள்தன்மை ஒருங்கிணைப்பு சேவைகள்” ஒப்பந்தம் மற்றும் “வேறுபாடுகளைக் கடந்து தொடர்புகொள்வதில் கலாச்சார தொடர்பு பன்முகத்தன்மை உரையாடல் வட்டம்” ஆகியவற்றுக்கான பயிற்சி பட்டறைகள் அவற்றில் அடங்கும் என்று சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளமை காணக்கிடைத்தது.
DOGE என்றால் என்ன?
அரசாங்க செயல்திறன் துறை (DOGE) என்பது கடந்த 20 ஆம் திகதி ஜனவரி மாதம்(20.01.2025) ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவின் மூலம் நிறுவப்பட்ட அமெரிக்க அரசாங்கத்தின் கீழ் உள்ள ஒரு தற்காலிக அமைப்பாகும்.
எலான் மஸ்க் தலைமையிலான DOGE இன் நோக்கம், வீணான மற்றும் மோசடியான கூட்டாட்சி செலவினங்களைக் குறைப்பதும், அதிகப்படியான விதிமுறைகளை அகற்றுவதும் ஆகும்.
இந்தத் துறையை உருவாக்கியமைக்கும் அதன் அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கும் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் சட்ட வல்லுநர்களும் DOGE நிறுவனத்திற்கு இதுபோன்ற செயல்களைச் செய்ய அதிகாரம் இல்லை என்று கூறி, இது குறித்த அமைப்பினால் மேற்கொள்ளப்படும் “கையகப்படுத்துதல்” அல்லது “சதி” என்று குறிப்பிடுகின்றனர்.
இது தொடர்பாக சர்வதேச ஊடக அறிக்கைகள்
bbc.com | usatoday.com | abcnews.go.com
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம்
இந்த விடயம் தொடர்பில் மேலும் உறுதிப்படுத்தலுக்காக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தைத் தொடர்பு கொண்டுள்ளோம், மேலும் அவர்களின் பதிலுடன் இந்தக் கட்டுரையைப் விரைவில் புதுப்பிப்போம்.
மேலே உள்ள சமூக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இதுவரை எந்த பெயர்களும் வெளியிடப்படவில்லை, மேலும் அத்தகைய வெளிப்பாடு ஏற்பட்டால் இந்த கட்டுரையை புதுப்பிப்போம் என்று நம்புகிறோம்.
இந்த உண்மைகளை ஆராய்ந்ததில், மேற்கண்ட சமூக ஊடக இடுகைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் USAID நிதியைப் பெற்றனரா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும், இதைத் தொடங்கிய DOGE அமைப்பு அத்தகைய குழுக்களின் பெயர்களை வெளியிடவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட விரிவான ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:USAID நிதியைப் பெற்றுக் கொண்ட அரசியல் பிரதிநிதிகள் என பரவும் தகவல் உண்மையா ?
Fact Check By: S.G.PrabuResult: Misleading


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team