பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இறைபதம் அடைந்துவிட்டதாக பகிரப்படும் போலியான தகவல்!

False சர்வதேசம் | International

update

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் இன்று (2025.04.20) நித்திய இளைப்பாறினார். இதனை வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது.

12 வருடங்களாக அவர் பரிசுத்த பாப்பரசராக சேவையாற்றிய நிலையில் நிமோனியா தொற்று காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் ரோமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பரிசுத்த பாப்பரசர்  பிரான்சிஸிஸ் அவர்கள் இறைப்பதம் அடைந்துவிட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆண்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archived Link 

குறித்த பதிவில் புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் ஆண்டவனடி சேர்ந்தார் என தெரிவிக்கப்பட்டு இன்று ( 2025.02.24) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதனை உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் அதனை பதிவேற்றியிருந்தமையை எம்மால் காண முடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த சமூக ஊடக பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று உள்நாட்டும் மற்றும் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவர் உடல் நலக் குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை தொடர்பான செய்திகள் மாத்திரமே வெளியாகியிருந்தது. தவிர அவர் இறைப்பதம் அடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட எந்தவொரு செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை என்பதனை நாம் உறுதிப்படுதினோம். Link | Link

அத்துடன் இது குறித்து நாம் தொடர்ந்து ஆய்வினை மேற்கொண்டபோது Vatican News பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் தமது பத்தாவது இரவை வைத்தியசாலையில் நிதானமாக கழிப்பதாக தெரிவித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

குறித்த செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இரத்தப் பரிசோதனை முடிவுகள், சிறுநீரக செயலிழப்பின் ஆரம்பத்தை வெளிப்படுத்துவதாக இருந்தாலும் தற்போது அவைக் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், திருத்தந்தை , உரோம் ஜெமெல்லி மருத்துவமனையில் சுய நினைவுடன் இருக்கின்றார் என்றும், உடல்நிலை மோசமாக இருந்தாலும், மூச்சுத்திணறல் பிரச்சனை எதுவும் இல்லை என்றும் வத்திக்கான் திருப்பீடச்செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Archived Link

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பரிசுத்த பாப்பரசர்   பிரான்சிஸ் சுவாசக் கோளாறு காரணமாக கடந்த 14 ஆம் திகதி ரோம் நகரில் உள்ள காமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டதால், நிமோனியா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சஸிஸ் அவர்களுக்கு இரத்தம் உறைதலுக்கு தேவையான இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை குறைந்ததால், இரத்த மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புரூனி தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸூக்கு சிறுநீரக செயலிழப்புக்கான அறிகுறிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் உடல்நலம் குணமடைய வேண்டி, உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க மக்கள் ஏராளமானோர் சிறப்பு பிரார்த்தனைகளில்  ஈடுபட்டு வருகின்றமையும்  குறிப்பிடத்தக்கது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion (முடிவு)

மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸிஸ் அவர்கள் இறைப்பதம் அடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல் தவறானது என்பதுடன் அவரின் உடல்நிலை மோசமடைந்து வரும் நிலையில் அவர் தொடர்ந்தும் ரோமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக வத்திக்கான ஊடகத் துறை அறிவித்துள்ளது.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இறைபதம் அடைந்துவிட்டதாக பகிரப்படும் போலியான தகவல்!

Fact Check By: suji shabeedharan 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *