சாம்பியன் கிண்ணத்தில் பாகிஸ்தானை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் வந்தே மாதரம் பாடலை பாடினார்களா ?

Partly False விளையாட்டு | Sports


INTRO:  
சாம்பியன் கிண்ணத்தில் பாகிஸ்தானை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் வந்தே மாதரம் பாடலை பாடினார்கள் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.



தகவலின் விவரம் (What is the claim):


Facebook Link  | Archived Link 

சமூக வலைத்தளங்களில் “ நேற்று பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்த பிறகு இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டு தங்களுடைய வலைதள பக்கத்தில் பதிவிட்ட வீடியோ.

பார்த்தவர் மனதில் நிற்கும் காட்சி…

#GetOutStalin #dmkfails #NadodiMannan #gobackstalin #GoBackStalin #Annamalai #BJP #MkStalin #Udhayanidhi”இம் கடந்த மாதம் 25 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு (25.02.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

நாம் முதலில் இந்திய கிரிக்கெட் சபையின் உத்தியோகப்பூர்வ சமூகவலைத்தளங்களை ஆய்வு செய்தபோது, பாகிஸ்தானுடன் நடந்த லீக் போட்டியில் இந்தியா வென்றமைக்காக சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதை போன்று எவ்விதமான வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்படவில்லை.

சமூகவலைத்தளங்களில் பரவுகின்ற குறித்த வீடியோ பதிவை நன்கு அவதானித்த போது, அவர்கள் கையில் வெற்றிக்கிண்ணத்தினை ஏந்திய வண்ணம் காணப்பட்டனர்.

குறித்த வீடியோ பகிரப்பட்ட தினத்தில் (23.02.2025) சாம்பியன் கிண்ண போட்டிகளின் 5 ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியமை குறிப்பிடக்கத்தக்கது.

ஆகவே அந்த போட்டியில் வென்றமைக்கான கிண்ணத்தினை வழங்க வாய்ப்பில்லை. மேலும் குறித்த கிண்ணமானது ஐசிசி இருபதுக்கு20 கிண்ண போட்டியில் வெல்லும் அணிக்கு வழங்கும் கிண்ணத்தினை போன்று காணப்பட்டது.

நாம் ஐசிசி சாம்பியன் கிண்ணம் மற்றும் ஐசிசி இருபதுக்கு20 கிண்ணங்களை ஒப்பிட்டு பார்த்தோம்.

மேலும் அவர்கள் அணிந்திருந்த ஜெர்சியில் இருபதுக்கு20 உலகக்கிண்ண இலட்சினை பதிந்திருந்தமை காணக்கிடைத்தது.

நாம் குறித்த வீடியோவில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவஸ் இமேஜீனை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இந்திய கிரிக்கெட் சபையின் உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கடந்த வருடம் இந்தியா இருபதுக்கு20 உலகக்கோப்பையை வென்ற தினத்தில் (ஜூலை 4, 2024) வந்தே மாதரம் என்று தலைப்பிட்டு குறித்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

BCCI on X: “वंदे मातरम 🇮🇳 https://t.co/j5D4nMMdF9” / X

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், சாம்பியன் கிண்ணத்தில் பாகிஸ்தானை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் வந்தே மாதரம் பாடலை பாடினார்கள் என சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோ கடந்த வருடம் இந்திய அணி இருபதுக்கு20 உலகக்கிண்ணத்தை வென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ என்பது கண்டறியப்பட்டது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:சாம்பியன் கிண்ணத்தில் பாகிஸ்தானை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் வந்தே மாதரம் பாடலை பாடினார்களா ?

Fact Check By: S.G.Prabu 

Result:Partly False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *