கதிரையில் இருந்து விழந்த பசில் ராஜபக்ஷவின்  புகைப்படமா இது?

Misleading இலங்கை | Sri Lanka
May be an image of 1 person and hospital

INTRO :  

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாற்காலியில் இருந்து விழுந்தமையால் கடந்த மாதம் 23 ஆம் திகதியன்று மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்ட கருத்தினை தொடர்ந்து அவர் அமெரிக்காவில் நாற்காலியில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளான புகைப்படம் என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link  | Archived Link


சமூகவலைத்தளங்களில் “சேட்டுக்கு மேலால் Belt போட்ட அந்த அமெரிக்கா டொக்டர் யாரு? “ என கடந்த மாதம் 25 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு  (25.05.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சட்டவிரோத நில பரிவர்த்தனை தொடர்பில் கடந்த மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற வழக்கின் போது அமெரிக்காவில் இருக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச விபத்துக்குள்ளாகி கழுத்து மற்றும் நரம்பு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளமையால் குறித்த வழக்கிற்கு வருகை தர இயலாது போனது என கருத்து முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. News Link 1 

இதனை தொடர்ந்து குறித்து புகைப்படமானது பல்வேறு கருத்துக்களை கொண்டு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதை நாம் அவதானித்தோம்.

முதலில் நாம் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது இது கடந்த 2015 ஆம் ஆண்டு Durdens தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.

குறித்த புகைப்படத்தினை ஊடகவியலாளரான அசாம் அமீன் அவரின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தமை காணக்கிடைத்தது.

A person in a hospital bed

AI-generated content may be incorrect.

x.com Link  | Archived Link

பொருளாதார மேம்பாட்டு அமைச்சராகப் பணியாற்றிய போது, ​​திவி நெகுமத் துறையில் நிதி முறைகேடுகள் நடந்ததாக சந்தேகத்தின் பேரில் 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பசில் ராஜபக்ஷ, ஒன்றரை மாதங்கள் சிறையில் இருந்த பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டு, சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சிறையில் இருந்தபோதும் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார். news Link  1| News Link 2

குறித்த நேர்காணலில், சிறையில் இருந்தபோது முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பிரிவிடமும் நாங்கள் விசாரித்தவேளையில்,சமூக ஊடகங்களில் பகிரப்படும் குறித்த புகைப்படமானது பசில் ராஜபக்ஷ முன்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும் என்றும், 

சமீபத்தில் நடந்த விபத்து தொடர்பாக ஊடகங்களுக்கு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பிரிவு எமக்கு உறுதி செய்தது.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் கதிரையில் இருந்து விழந்த பசில் ராஜபக்ஷவின்  புகைப்படம் என பரவும் காணொளிகள் கேமிங் காணொளிகள் என கண்டறியப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கதிரையில் இருந்து விழந்த பசில் ராஜபக்ஷவின் புகைப்படமா இது?

Fact Check By: S.G.Prabu 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *