
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் குருக்களின் கனவில் கூறியதாக ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:
ஈழத்து குயில் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” #வற்றாப்பளை_கண்ணகி_அம்மாவின்_புதுமை
ஆலய குருக்களின் கனவில் சென்று கூறிய புதுமை 🙏கோதுமைமா🙏அரிசிமா🙏மஞ்சள்மா🙏போன்றவற்றினை(தூய்மையான நீரினை)இட்டு இறுக குழைத்து 🙏சிட்டி போன்ற வடிவத்தில் அமைத்து 🙏வீட்டின் முற்பகுதியில் அவ்வாறு அமைக்கப்பட்ட சிட்டி விளக்கினை வைத்து விளக்கேற்ரவும்🙏பின்னர் அந்த விளக்கு அணைந்த(எரிந்த முடிந்த பின்னர்)அந்த சிட்டி விளக்கினை ஒரு தூய்மையான பாத்திரத்தில் வைத்து தூய்மையான நீரினை விட்டு குழைத்து எமது வீட்டினுள் தெளிக்க வேண்டும்
உலகத்தின் அசதாரண சூழ்நிலையில் எமது தாயார் எங்களின் பாதுகாப்புக்கு எமது குருக்களின் கனவில் சென்று கூறிய புதுமை
🙏🙏அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் 🙏🙏” என்று கடந்த 3 ஆம் திகதி (03.04.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த செய்தி பலராலும் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இதுதொடர்பாக, நாம் மேற்கொண்ட ஆய்வில், முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் தொடர்பில் வெளியாகிய செய்தி உண்மைக்குப் புறம்பானதென ஆலய பரிபாலன சபை தெரிவித்திருந்தமை காணக்கிடைத்தது.
மேலும் குறித்த வீடியோவில் வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலய குருக்கள் சொன்னதாக வதந்தியை பரப்புவதாகவும் குறித்த தகவலுக்கும் ஆலயத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
உலகளலாவிய ரீதியில் இந்த கண்ணகியம்மன் மீது பக்தி கொண்ட பலர் இதை செய்துள்ளதாகவும், குறித்த செயல் தவறானது எதும் இல்லை எனினும் தங்கள் ஆலயத்தின் பெயரை பயன்படுத்தி பரப்பும் செய்தி உண்மைக்குப் புறம்பானதென அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆம் திகதி (05.04.2020) இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை அறியாது செய்தி வெளியிட்டிருந்த சில இணையத்தளங்கள் அவர்கள் வெளியிட்டிருந்த செய்தியினை இணையத்திலிருந்து நீக்கியிருந்தமையும் காணக்கிடைத்தது.
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய குருக்களின் கனவில் கூறியதாக பரவி வருகின்ற தகவல் தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

Title:வற்றாப்பளை கண்ணகி அம்மன்; ஆலய குருக்களின் கனவில் கூறியது உண்மையா?
Fact Check By: Nelson ManiResult: False