INTRO :
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான A320-200 என்ற விமானத்திற்கு புதிதாக யாழ்ப்பாணம் நகரம் என பெயரிடப்பட்டுள்ளதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில்““யாழ்ப்பாணம் நகரம்” எனும் பெயரைப் பெற்ற இலங்கை ஏர்லைன்ஸ் விமானம்
இலங்கை ஏர்லைன்ஸ் தனது A320-200 வகை விமானங்களில் ஒன்றிற்கு “யாழ்ப்பாணம் நகரம்” (City of Yalpanam) எனப் பெயரிட்டு, யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தையும் கலாச்சாரப் பெருமையையும் மதிக்கும் வகையில் முக்கியமான அடையாளத்தை உருவாக்கியுள்ளது.
தெற்காசியாவின் சிறந்த விமான சேவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்நிறுவனம், தமிழர் வாழ்வில் முக்கிய இடம் பிடிக்கும் நல்லூர் திருவிழா காலத்தில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை இழுக்கும் திட்டங்கள் “என இம் மாதம் 01 ஆம் திகதி 2025 ஆம்ஆண்டு (01.08.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது குறித்து நாம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானச்சேவையின் உத்தியோகப்பூர்வ சமூகவலைத்தளங்களை ஆய்வு செய்தபோது அவ்வாறு புதிதாக பெயரிடப்பட்டமை தொடர்பாக செய்திகள் எதுவும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை.
குறித்த விமானம் தொடர்பாக நாம் மேற்கொண்ட தேடலின் போது, கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் குறித்த விமானத்திற்கு யாழ்ப்பாணம் நகரம் அதாவது,
City of Yalpanam என பெயரிடப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
மேலும் குறித்த விமானத்தின் கடந்த வருடங்களின் புகைப்படங்கள் சிலவற்றை ஆய்வு செய்தபோது, 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத காலக்கட்டத்தில் இருந்து குறிப்பிட்ட விமானத்தில் City of Yalpanam என நாமம் அடங்கிய ஸ்டிக்கர் அவ்விமானத்தில் பொறிக்கப்பட்டிருந்தமையும் அவதானிக்க கிடைத்தது. jetphotos.com
இலங்கையில் மேலும் சில பிரசித்தி பெற்ற நகரங்களின் பெயர்கள் சூட்டப்பட்ட விமானங்கள் இயங்குவதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த பதிவில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் புகைப்படமும் உள்ளடக்கப்பட்டிருந்தமையினால், அவரின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தினையும் ஆய்வு செய்தபோது, அவ்வாறான எவ்விதமான பெயரிடப்பட்டமை தொடர்பாக பதிவுகள் எதுவும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை.
இது தொடர்பாக நாம் விமானநிலைய ஊடகவியலாளரை தொடர்புக்கொண்டு
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றிற்கு சமீபத்தில் “யாழ்ப்பாணம் நகரம்”என புதிதாக பெயரிடப்பட்டதா அல்லது ஏற்கனவே இருந்த விமானத்திற்கு புதிதாக ஸ்டிக்கர் எதுவும் ஒட்டப்பட்டதாக வினவியபோது, அவ்வாறான எவ்விதமான மாற்றங்களும் சமீபத்தில் இடம்பெறவில்லை என தெரிவித்தார்.
நாம் இது தொடர்பாக மேலதிக தகவலினை பெற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையினை தொடர்புக்கொண்ட போதிலும், அவர்களிடம் இருந்து எமக்கு எவ்விதமான பதிலும் கிடைக்கப்பெறவில்லை.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், “யாழ்ப்பாணம் நகரம்”என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமொன்றிக்கு புதிதாக பெயரிடப்பட்டதாக தெரிவித்து பகிரும் தகவல் தவறானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Title:“யாழ்ப்பாணம் நகரம்”என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமொன்றிக்கு புதிதாக பெயரிடப்பட்டதா..?
Fact Check By: S.G.PrabuResult: Misleading


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team