
INTRO :
IMF பேச்சு முடியும் வரையில் தேர்தலுக்கு இடமில்லை என ஜனாதிபதி என ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” IMF பேச்சு முடியும் வரையில் தேர்தல் பேச்சுக்கு இடமில்லை – ஜனாதிபதி
************************************
தேர்தல் ஆணைக்குழுவுக்கும்
அமைச்சரவைக்கும் அறிவிப்பு
******************************
சர்வதேச நாணய நிதிக் குழுவுக்கு
இடையிலான பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பான பேச்சு வார்த்தைகள் முடியும் வரை
நாட்டில் எந்தத் தேர்தலும் நடைபெறாது என ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்விடயமாக ஜனாதிபதி தேர்தல் ஆணைக்குழுவிற்கும் அமைச்சரவைக்கும் அறிவித்துள்ளார்
சர்வதேச நாணய நிதியத்தின் கடன்
உதவியின் இறுதிக் கொடுப்பனவு
கிடைக்கும் வரை தேர்தல்கள் நடத்துவதில் சாத்தியப்பாடுகள் இல்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
இதற்கிணங்க IMF உடனான கடனுதவி தொடர்பான பேச்சு வார்த்தைகள் ஜூலை மாதம் வரை நீடிக்கும் எனவும் அதன் பின்னரே தேர்தல் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்…… “ என கடந்த மாதம் 30 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (30.03.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Explainer (விளக்கப்படுத்தல்)
நாம் இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவிடம் வினவிய போது, மேற்படி அறிக்கையை மறுத்ததோடு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியம் தொடர்பாக எவ்விதமான விடயங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 10 பில்லியன் தேர்தலுக்கான செலவினங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வருடத்தில் பிற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் அரசியலமைப்பு ரீதியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் இவ்வருடம் இரண்டாம் பாதியில் நடத்தப்படவுள்ளதாகவும் ஆணைக்குழு அதற்குத் தயாராகி வருகின்றது. அது தெரடர்பான வினவலுக்கு பதிலளிக்கும் போது, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திரு சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியதாக ‘அத தெரண’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினரை நாம் தொடர்புகொண்டு வினவிய போது, ஜனாதிபதி இதுவரை கூறியுள்ளவாறு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்ததைப் போன்று நாட்டில் தற்போதுள்ள அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் நடத்தப்படும் என எமக்கு தெரிவித்தனர்.
ஜனாதிபதித் தேர்தல் குறித்த காலத்திற்குள் நடத்தப்படும் என்றும், வருகின்ற வருடம் (2025) பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும், 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் தேவையான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு ‘X’ தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.
கடந்த மாதம் 27ஆம் திகதி (27.03.2024) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களினால் எதிர்வரும் தேர்தல்கள் பிற்போடப்படும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டை அரசாங்கம் வன்மையாக நிராகரிப்பதாக தெரிவித்தார். அரசியல் சாசனத்தின்படி சரியான நேரத்தில் திட்டமிட்ட தேர்தல் நடத்தப்படும். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
எவ்வாறாயினும், மார்ச் 2023 இல் நடைபெறவிருந்த இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல், நாட்டின் பொருளாதார ஸ்திரமின்மையைக் காரணம் காட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனுக்களும் உள்ளன. இந்த விவகாரம் குறித்த முக்கிய ஊடக அறிக்கை இதோ.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் IMF பேச்சு முடியும் வரையில் தேர்தலுக்கு இடமில்லை என ஜனாதிபதி கூறியதாகப் பரவும் தகவல் தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:IMF பேச்சு முடியும் வரை தேர்தலுக்கு இடமில்லை என்று ஜனாதிபதி தெரிவித்தாரா?
Fact Check By: S.G.PrabuResult: Insight


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team