
கத்தார் வாழ் இலங்கை மக்களுக்கு மிகமுக்கியமான அறிவித்தல் என்று இலங்கை வெளிநாட்டு உறவுகள் அமைச்சினால் வெளியிடப்பட்ட கடிதம் என்று ஒரு பிரதி புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Sri Lanka VS Qatar என்ற பேஸ்புக் பக்கத்தில் ” #Ministry #of #Foreign #Relations – #SriLanka 🇶🇦🤝🇱🇰” என்று கடந்த 14 ஆம் திகதி (14.04.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த பதிவில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த கடிதத்தில் கத்தார் வாள் இலங்கை மக்களுக்கு மிகமுக்கியமான அறிவித்தல் கடந்த காலமாக நிலவிவரும் அசாதாரண நிலை காரணமாக கத்தார் நாட்டில் வாழக்கூடிய மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வேண்டிக்கொள்கிறோம் அதுமட்டும் இல்லாது தங்களது பயண கடவு சீட்டுக்களை கையில் வைத்து கொள்ளுங்கள் எங்களது அறிக்கை மிகவிரைவில் வரலாம் நன்றி ” என அச்சிடப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)

இதுதொடர்பாக, நாம் மேற்கொண்ட ஆய்வில், குறித்த கடிதத்தில் அச்சிடப்பட்டிருந்த வெளிநாட்டு உறவுகள் அமைச்சு – இலங்கை என்ற சின்னம் அவர்களின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளமை எமது ஆய்விலிருந்து கண்டறியப்பட்டது.
வெளிநாட்டு உறவுகள் அமைச்சினால் வெளியிடப்படும் ஊடக அறிக்கையில் சின்னம் பின்வருமாறு தான் காணப்படும்.

மேலும் குறித்த அறிக்கையில் போலியானது என இலங்கைக்கான கத்தார் தூதரகம் அவர்களின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தமை காணக்கிடைத்தது.

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் சமூக வலைதளங்களில் பரவிவரும் வெளியுறவு அமைச்சகத்தின் கடிதம் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் சமூக வலைதளங்களில் பரவிவரும் வெளியுறவு அமைச்சகத்தின் கடிதம் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.