INTRO :
திருகோணமலை - கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு விபத்து என சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” திருகோணமலை - கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து;

மாணவர்கள் உட்பட பலர் மாயம் : 5 பேர் பலி “ என கடந்த மாதம் 23 ஆம் திகதி (23.11.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

நாம் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்திய போது, இது 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய புகைப்படம் என கண்டறியப்பட்டது.

பெந்தர ஆற்றின் குறுக்கே பயணிகளை ஏற்றிச் செல்லும் பெந்தோட்ட ஹொரவல பாலப் படகு விபத்து 2016 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 13 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படமே தற்போது கிண்ணியா படகு விபத்து என ஊடகங்களும் சமூகவலைத்தள பயனாளர்களும் பகிர்ந்து வருகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Lankadeepa | Archived

மேலும் இணையத்தில் பகிரப்படும் கிண்ணியா படகு விபத்து புகைப்படம் 2017 ஆம் ஆண்டு தினமின பத்திரிகையின் இணையத்தளத்தில், வெள்ளத்தில் மூழ்கிய பாலப் படகிற்கு பதிலாக புதிய பாலப் படகு அமைப்பதற்கு வளல்லாவிட்ட பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Dinamina | Archived

கிண்ணியா படகு விபத்து தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ தொடர்பாக நாம் ஆய்வினை மேற்கொண்ட போது, இலங்கை கடற்படையின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ எமக்கு கிடைக்கப்பெற்றது.

Facebook | Archived Link

மேலும் நாம் மேற்கொண்ட ஆய்வில் லங்காதீப பத்திரிகையின் இணையப்பதிவில் வெளியாகிருந்த கிண்ணியா படகு விபத்து தொடர்பான புகைப்படங்களும் எமக்கு கிடைக்கப்பெற்றன.

Lankadeepa | Archived

எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், கிண்ணியா படகு விபத்து என பகிரப்பட்ட புகைப்படம் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற பெந்தோட்ட ஹொரவல பாலப் படகு விபத்துடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கிண்ணியா படகு விபத்தில் சிறுவனை காப்பாற்றும் வீடியோ என பகிரப்பட்ட வீடியோ தொடர்பான ஆய்வறிக்கை


எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கிண்ணியா படகு விபத்து என பகிரப்பட்ட புகைப்படம் உண்மையானதா?

Fact Check By: S G Prabu

Result: Misleading