
INTRO :
சம்மாந்துறை வைத்தியசாலை உள்ளே வந்த யானை வந்ததாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” சம்மாந்துறை வைத்தியசாலைக்கு திடீரென விஜயம் செய்த யானை
ஊரைச் சுற்றிப் பார்க்க வந்தவேளை ஏற்ப்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக சம்மாந்துறை வைத்தியசாலைக்கு வந்துள்ளதாக தகவல் “ என இம் மாதம் 09 ஆம் திகதி (09.09.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் குறித்த பதிவிலிருந்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, எமக்கு கடந்த 6 ஆம் திகதி மேற்கு வங்காளம் பகுதியில் அமைந்துள்ள ஜல்பைகுரி இராணுவ வைத்தியசாலைக்குள் உழைந்த யானை என கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக, இந்திய வன சேவையாளரான Susanta Nanda என்பவர் அவரின் டுவிட்டர் பக்கத்தில் குறித்த யானையின் புகைப்படங்களை பதிவிட்டு டுவிட் செய்துள்ளார்.
மேதினிபூர் மாவட்டத்தின் பாஜக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான Dilip Ghosh அவர்களும் குறித்த சம்பவம் தொடர்பாக வீடியோ பதிவினை டுவிட் செய்துள்ளமை காணக்கிடைத்தது.
அத்துடன், இந்திய செய்தி நிறுவனமான NDTV இணையத்தளத்தில் இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

நாம் இதனை மேலும் உறுதி செய்துகொள்ள சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு தொடர்புக்கொண்டு வினவிய போது அவ்வாறான எவ்விதமான சம்பவமும் இடம்பெறவில்லை என எமக்கு உறுதி செய்தனர்.
இதற்கமைய சம்மாந்துறை வைத்தியசாலைக்கு உள்ளே வந்த யானை என பகிரப்படும் புகைப்படம் இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் எடுக்கப்பட்டதாகும்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:சம்மாந்துறை வைத்தியசாலை உள்ளே வந்த யானை; உண்மை என்ன தெரியுமா?
Fact Check By: S G PrabuResult: Misleading

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team