INTRO :
நாட்டில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” நாளுக்கு நாள் ஆசியாவின் ஆச்சரியங்கள்

இன்று நள்ளிரவு முதல்
இன்று நள்ளிரவு முதல் Ceypetco; பெட்ரோல் ஒக்ரோன் 92 – 750/-, ஒக்ரோன் 98 – 765/-, ஆட்டோ டீசல் – 455/-, சூப்பர் டீசல்- 498/-
“ என இம் மாதம் 07 ஆம் திகதி (07.06.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பரவுகின்ற செய்தி தொடர்பில் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக ஆய்வினை மேற்கொண்டோம்.

நாம் இது தொடர்பாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சாரான கஞ்சன விஜேசேகரவை தொடர்புக்கொண்டு வினவியபோது, இது முற்றிலும் போலியானது, என அவர் தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் தற்போதைய விலை தொடர்பாக ஆய்வினை மேற்கொண்ட போது, அதில் கடந்த மாதம் 24 ஆம் திகதி (24.05.2022) அதிகாலை 3 மணிக்கு விலையேற்றம் செய்யப்பட்ட விலையே இன்று வரை (08.06.2022) அமுலில் உள்ளது.

ceypetco Link | Archived Link

இதற்கமைய நாம் மேற்கொண்ட தேடலில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளது என பகிரப்படும் செய்தி போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.


எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதா?

Fact Check By: S G Prabu

Result: False