
INTRO :
மஸ்கெலியாவில் நாயை வேட்டையாட வந்த சிறுத்தை என சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ”
மஸ்கெலியாவில் நாயை வேட்டையாட வந்த சிறுத்தை – வெளியான பரபரப்பு காணொளி “ என கடந்த மாதம் 23 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (23.01.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் குறித்த வீடியோவில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.
குறித்த தேடலின் போது, இது இந்தியாவில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்றதாக இந்திய ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்தி எமக்கு காணக்கிடைத்தது.
maalaimalar.com | dailythanthi.com
நாம் இதனை மேலும் உறுதிசெய்து கொள்ள மஸ்கெலியா பிரதேச ஊடகவியலாளர்களை தொடர்புகொண்டு வினவியபோது, இவ்வருடத்தில் அவ்வாறான சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என குறிப்பிட்டனர்.
மேலும் மஸ்கெலியா மற்றும் ஹட்டன் போன்ற பகுதிகளில் சிறுத்தைப்புலிகள் கிராமங்களுக்குள் புகுந்து நாய்கள், பூனைகள், வளர்ப்பு பிராணிகளை கடத்திச் செல்லும் சம்பவங்கள் இதற்கு முன்னரும் பதிவாகியிருந்தன என்று உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், மஸ்கெலியாவில் நாயை வேட்டையாட வந்த சிறுத்தை என பகிரப்படும் வீடியோ இந்தியாவில் நீலகிரி மாவட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் என கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:மஸ்கெலியாவில் நாயை வேட்டையாட வந்த சிறுத்தை என பரவும் வீடியோ உண்மையா?
Written By: S G PrabuResult: False


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team