இலங்கை பிக்கு ஒருவர் பொலிஸாருடன் சண்டையிடும் காட்சியா?

இலங்கை | Sri Lanka சமூகம் | Society

INTRO :
இலங்கை பிக்கு ஒருவர் பொலிஸாருடன் சண்டையிடும் காட்சி என குறிப்பிட்டு ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):


Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” ஒருபக்கம் பிரித் ஓதல்                 மறுபக்கம் பையிற். இலங்கையில் சாதுக்கள் “ என இம் மாதம் 19 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு  (19.11.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலில் குறித்த புகைப்படத்தினை ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, புகைப்படம் தொடர்பான தகவல் எமக்கு கிடைக்கப்பெற்றது.

Link

அதில் குறித்த புகைப்படம் தாய்லாந்து நாட்டில் எடுத்தமை எம்மால் காணக்கிடைத்தது. அதற்கமைய நாம் கடந்த 18 ஆம் திகதி தாய்லாந்து நாட்டில் ஆர்ப்பாட்டத்தின் போது மோதல் இடம்பெற்றதா என கண்டறிய ஆய்வினை மேற்கொண்டபோது, சர்வதேச ஊடகங்கள் இது தொடர்பாக வெளியிட்ட செய்தி எமக்கு கிடைக்கப்பெற்றது.

Link 1 | Link 2 | Link 3 

இதற்கமைய இலங்கை பிக்கு ஒருவர் பொலிஸாருடன் சண்டையிடும் காட்சி என பகிரப்பட்ட புகைப்படம் தாய்லாந்தில் உள்ள பிக்கு என கண்டறியப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:இலங்கை பிக்கு ஒருவர் பொலிஸாருடன் சண்டையிடும் காட்சியா?

Fact Check By: S G Prabu 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *