பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயார்– சஜித்; உண்மை என்ன?
INTRO :
சஜித் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார் என ஒரு செய்தி சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் ” யாராவது கேட்டீங்களாப்பா ?
எந்த நாட்டு மக்களா இருக்கும் ? 🧐
மொழிபெயர்ப்பு - மக்கள் கேட்டதற்கிணங்க பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயார் #SriLanka “ என இம் மாதம் 04 ஆம் திகதி (04.04.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
நமது குழுவினர் இது தொடர்பாக பிரதான ஊடகங்கள் எதும் செய்தி வெளியிட்டதா என்று ஆய்வினை மேற்கொண்ட போது அவ்வாறான எவ்விதமான செய்திகளும் வெளியாகி இருக்கவில்லை.
எவ்வாறாயினும், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முகங்கொடுத்து ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பதவி விலகி செயற்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த செய்தி எமக்கு கிடைக்கப்பெற்றது.
நேற்று முன்தினம் (03.04.2022) எதிர்கட்சி தலைவரினால் ஏற்பாட்டு செய்யப்பட்டிருந்த கண்டன ஊர்வத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்ட போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தாம் எந்த பதவியையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் மக்களின் வாக்குகள் இல்லாத அரசாங்கம் அமையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து நாம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் ஊடகச் செயலாளரை தொடர்புகொண்டு வினவிய போது, இது முற்றிலும் போலியான செய்தி என்றும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் எந்தவொரு பதவியையும் வகிக்க மாட்டார் என்றும் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவினரிடமும் நாம் வினவிய போது, இது உண்மைக்குப் புறம்பானது என தெரிவித்தனர்.
எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், எதிரக்கட்சி தலைவர் சஜித் பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயார் பரவும் செய்தி போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title:பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயார்– சஜித்; உண்மை என்ன?
Fact Check By: S G PrabuResult: Misleading