இலங்கையில் சிறுவர்களை கடத்திச் சென்று கொலை செய்வதாகப் பரவும் வீடியோ; உண்மை என்ன?

இலங்கை | Sri Lanka சமூக ஊடகம்

INTRO :

இலங்கையில் சிறுவர்களை கடத்திச் சென்று கொலை செய்வதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோவுடன் குரல் பதிவும் சேர்த்து பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “வவுனியா பிரதேசத்தில் இரு குழந்தைகள் கடத்தப்பட்டு அவர்கள் கொலை செய்யப்படுகின்ற காட்சி என குறித்த வீடியோரவை வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டு வருகின்றது. அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களிலும் சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் மன்னார் பிரதேசத்தில் இரண்டு குழந்தை கடத்தப்பட்டு பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக குறித்த குரல் பதிவில் குறிப்பிட்டு பகிரப்படுகின்றது. “ 

https://srilanka.factcrescendo.com/tamil/wp-content/uploads/2023/05/WhatsApp-Audio-2023-05-16-at-1.19.00-PM.ogg

https://srilanka.factcrescendo.com/tamil/wp-content/uploads/2023/05/WhatsApp-Audio-2023-05-16-at-1.19.00-PM-1.ogg

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இது தொடர்பாக எமது குழுவினர்  வவுனியா பொலிஸ் நிலையத்தினை தொடர்புகொண்டு வினவிய போது, அவ்வாறான சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை, என எமக்கு தெரிவித்தனர்.

அத்துடன், நாம் முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச பொலிஸ் நிலையங்களை தொடர்புகொண்டு வினவியபோது, அவ்வாறான எவ்விதமான சம்பவங்களும் பதிவாகவில்லை என்றே தெரிவிக்கப்பட்டது.

மன்னாரில் கடந்த சில நாட்களாக சிறுவர்களை இலக்கு வைத்து கடத்தல் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் கடந்த சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமை மக்கள் நடமாட்டம் குறைந்த பாதை வழியாக பயணித்த இரு சிறுவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தெரிவித்திருந்தனர்.

கடத்தல் முயற்சி தொடர்பில் திங்கட்கிழமை மன்னார் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் அந்த கடத்தல் கும்பல் மற்றும் வாகனம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பாக வெளியான செய்தினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மேலும் குறித்த வீடியோவில் பேசப்படும் மொழி தென் அமெரிக்காவில் பயன்படுத்தும் மொழி போன்றுள்ளது.

நாம் மேலும் இதனை உறுதி செய்துகொள்ள குறித்த வீடியோவினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இது 2018 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் பகிரப்பட்டு வருவதாக, காணக்கிடைத்தது.

அதில் குறிப்பிட்டுள்ள தகவலின்படி பிரேஸில் நாட்டினை சேர்ந்த FDN என்ற குழுவினரால் குறித்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Link 1 | Link 2 | Link 3 

குறித்த வீடியோ மிகவும் கொடூரமான முறையில் காணப்படுவதால் அதனை பல சமூக வலைத்தளங்கள் நீக்கியுள்ளமையினால் எமக்கு இது சரியாக எங்கு நடந்த சம்பவம் என கண்டறியமுடியவில்லை.

இறுதியாக, இதுபோன்ற கொலை முயற்சிகள் பிரேஸில் நாட்டில் நடைபெறுவது வழக்கம் என்று ஒரு ஆய்வறிக்கையும் எமக்கு கிடைத்தது. அதனை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி, இலங்கையில் சிறுவர்களை கடத்திச் சென்று கொலை செய்வதாகப் பகிரப்படும் வீடியோ இலங்கையில் நடந்த சம்பவம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:இலங்கையில் சிறுவர்களை கடத்திச் சென்று கொலை செய்வதாகப் பரவும் வீடியோ; உண்மை என்ன?

Fact Check By: S.G.Prabu 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *