
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவலொன்று பகிரப்படுகின்றமையை காணமுடிந்தது.
எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

குறித்த பதிவில் மத்திய வங்கி மோசடியில் ஈடுபட்ட அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் கைது! என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.09.29 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் பலர் அர்ஜுன் மகேந்திரன் கைது செய்யப்பட்டதாக ஊர்ஜிதமற்ற தகவல் என்றும், உண்மையில் அவர் கைது செய்யப்பட்டுவிட்டாரா? எனவும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
எனவே முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் சிங்கப்பூரில் வைத்து கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஏதேனும் செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகவில்லை என்பதனை அறிய முடிந்தது.
பாதுகாப்பு அமைச்சு
ஆகவே நாம் இது குறித்து பாதுகாப்பு அமைச்சை தொடர்பு கொண்டு வினவியிருந்தோம். இதன்போது அர்ஜுன் மகேந்திரன் கைது செய்யப்பட்டதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும், இது தவறான தகவல் என்றும் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளருமான பிரிகேடியர் எஸ். ஜோசப் தெரிவித்தார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
இதை மேலும் உறுதிப்படுத்த, பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான மினுர செனரத்திடம் நாம் இது குறித்து வினவியிருந்தோம். அதன்போது இது தவறான தகவல் என்றும் அர்ஜுன் மகேந்திரன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
ஆகவே இவ்வாறான ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்த போது, கடந்த 26 ஆம் திகதி ஸ்வர்ணவாஹினியில் இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவிடம், அர்ஜுன் மகேந்திரனின் கைது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரினால் கேள்வியெழுப்பப்பட்ட போது, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை கைது செய்யும் முயற்சியை இன்னும் கைவிடவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அர்ஜுன் மகேந்திரன் தனது பெயரை மாற்றிக் கொண்டு சிங்கப்பூர் பிரஜையாக வசித்து வருவதால், சிங்கப்பூர் நாட்டின் சட்டங்கள் அவரைக் கைது செய்வதற்குத் தடையாக அமைந்துளளதாகவும் குறித்த நிகழ்ச்சியில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்வையிடவும்
2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியில் முன்னெடுக்கப்பட்ட முறிகள் ஏலத்தின் போது அர்ஜுன் மகேந்திரனின் மருமகனான அர்ஜுன் அலோசியஸிற்கு சொந்தமான பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்திற்கு 10 பில்லியன் ரூபாய்க்கு அதிக மதிப்பிலான முறிகளை விற்பனை செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்பட்டதாக கூறி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்தது.
அர்ஜுன் மகேந்திரனை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர சட்டமா அதிபர் திணைக்களம் பல முறை முயற்சித்திருந்தது, ஆனால் சிங்கப்பூர் அதிகாரிகளிடமிருந்து எந்த நேர்மறையான பதிலும் கிடைக்கவில்லை.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அர்ஜுன் மகேந்திரனுக்கு அழைப்பாணை பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது. Link | Link
எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் 2015 ஆம் ஆண்டு பிணைமுறி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டதாக பகிரப்படும் தகவல் தவறானது என்பது கண்டறியப்பட்டது.
அத்துடன் அர்ஜுன் மகேந்திரன் உண்மையிலேயே கைது செய்யப்பட்டமை தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்தவுடன் நாம் இந்த கட்டுரையை புதுப்பிக்க காத்திருக்கின்றோம்.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டாரா?
Fact Check By: Suji shabeedharanResult: False


