
INTRO :
ஒரு குழந்தை ஐந்து நாட்களாக காணவில்லை என புகைப்படம் பல வருடங்களாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Nelson Nelson என்ற பேஸ்புக் கணக்கில் “ ஐந்து நாட்களாக காணவில்லை. உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும் – தகவல் தெரிவிக்க 9788339421. 7708377626 (26/03/2019). Please share as possible ” என இம் மாதம் 13 ஆம் திகதி (13.05.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
இந்த புகைப்படத்தினை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வுசெய்த போது 2019 ஆம் ஆண்டு முதல் தமிழ் மற்றும் மலையாள மொழிகள் குறித்த சிறுவன் தொடர்பில் பல விதமான தகவல்கள் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
அதில் Kundra News என்ற பேஸ்புக் பக்கத்தில் மொபைல் போனைப் பயன்படுத்தி சுமார் 40 மணி நேரம் விளையாடி வந்த ஒரு குழந்தை தனது மொபைல் போன் வெடித்ததால் பலத்த காயங்களுடன் திருவனந்தபுரத்தில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மலையாளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பதிவில் திருவனந்தபுரத்தில் எந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறப்படாததால், எமது மலையாள குழு, திருவனந்தபுரத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளையும் மற்றும் முக்கிய செய்தி ஊடகங்களையும் உள்ளடக்கிய விசாரணையைத் தொடங்கினோம்.
குறித்த தேடலில் இதுபோன்ற விபத்தில் சிக்கிய ஒரு குழந்தை எந்த வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. அது குறித்தான ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்க
குறித்த குழந்தையின் படங்களுடன் தமிழில் ஏராளமான டுவிட்டர் மற்றும் வாட்ஸ்அப் செய்திகளும் காணப்பட்டன. அதில் கேரளாவின் காசர்கோடு பகுதியில் காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த செய்தியில் குழந்தையின் முகவரி அல்லது பெற்றோரின் முகவரி குறிப்பிடப்படவில்லை.
பரிமாறிக்கொள்ளப்பட்ட சில குறிப்புகள் கீழே

இலங்கையில் இதுபோன்ற செய்திகள் எதுவும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை. மேலும், குறித்த குழந்தையின் புகைப்படத்தை பயன்படுத்தி அவ்வப்போது பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் போலி பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
இருப்பினும், இந்த குழந்தையின் புகைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை எங்களுக்கு கிடைக்கவில்லை.
இத்தகைய குறிப்புகள் பெரும்பாலும் இந்திய குழந்தைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை, அவை இலங்கையிலும் அவ்வப்போது பகிரப்படுகின்றன.
நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை உண்மையில் சமீபத்தில் காணாமல் போனதாக பகிரப்படும் தகவல் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த குழந்தையின் புகைப்படம் பல வருடங்களாக எவ்விதமான ஆதாரங்களின்றி பல்வேறு சம்பவங்களை தொடர்புப்படுத்தி பகிரப்பட்டு வருகின்றமை எமது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை உண்மையில் சமீபத்தில் காணாமல் போனதா?
Fact Check By: Nelson ManiResult: Misleading