
INTRO :
இலங்கையில் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் சிங்கள மொழி நீக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

NewJaffna என்ற பேஸ்புக் கணக்கில் “ தென்பகுதியை ஆக்கிரமிக்கும் சீனா; கடுப்பான இந்தியா; நீக்கப்பட்ட சிங்களம் ” என கடந்த மாதம் 31 ஆம் திகதி (31.05.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
இலங்கையில் தற்போது துறைமுக நகர அபிவிருத்தி செய்யும் இடத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பல பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
அதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணை தூதரகத்தில் பெயர் பலகையிலிருந்து சிங்களம் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வண்ணமுள்ளன.
சீனா தமிழை நீக்கியமையால் இந்தியா சிங்களத்தினை நீக்கியது என்ற கருத்தில் குறித்த பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது.
அதில் பகிரப்பட்டு வருகின்ற யாழில் அமைந்துள்ள இந்திய துணை தூதரகத்தினை நாம் கூகுள் மேப் மூலம் அவதானித்த போது, அது 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்தது.
குறித்த புகைப்படம் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எடுக்கப்பட்டிருந்த போதே அதில் சிங்கள மொழி இல்லாதுள்ளமை காணக்கிடைத்தது.

மேலும், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் 2019 ஆம் ஆண்டு தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படமும் தொகுப்பிலும் குறித்த பெயர் பலகையினை காணக்கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் நாம், சமீபத்தில் பெயர் பலகையில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பதையும் இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் மூலம் உறுதி செய்துக்கொண்டோம்.
ஆகவே குறித்த பெயர்ப்பலகையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், இதற்கு முன்னரும் சிங்களத்தில் குறிப்பிடப்படவில்லை என்றும் உறுதி செய்யப்பட்டது.
மேலும் இலங்கையில் அமைந்துள்ள பல பிராந்திய நாடுகளின் தூதரகங்களின் பெயர் பலகைகளில் சிங்களத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்று ஆய்வினையும் மேற்கொண்டோம்
அதற்கமைய பாகிஸ்தான் உயர் ஸ்தானிக அலுவலகத்தில் ஆங்கில மொழியில் குறிப்பிடப்பட்டிருந்தமை காணிக்கிடைத்தது.

இது போன்றே மாலைத்தீவு உயர் ஸ்தானிக அலுவலகத்தில் அந்நாட்டு மொழியான Dhivehi மற்றும் ஆங்கிலத்தில் காணப்பட்டது.

இதற்கமைய குறித்த உயர் ஸ்தாபனிக அலுவலங்களில் சிங்கள மொழி இடம்பெறவில்லை என்பதாகும்.
நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய யாழில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் பெயர் பலகையில் சிங்கள மொழி நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:யாழில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் பெயர் பலகையில் சிங்கள மொழி நீக்கமா?
Fact Check By: Nelson ManiResult: Misleading