
INTRO :
அரச ஊழியர்களுக்கான புகையிரத ஆசன முன்பதிவு அனுமதிப்பத்திரங்களுக்கு கட்டணம் அறிவிடப்படவுள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “ அரசு ஊழியர்கள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள திடீர் முடிவு .
நாளை முதல் அமுலுக்கு…
அரச ஊழியர்களுக்கான புகையிரத ஆசன முன்பதிவு அனுமதிப்பத்திரங்களை (வாரண்டுகள்) எண்பது வீதத்தால் குறைக்க ரயில்வே திணைக்களம் மற்றும் போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இருபது வீதமான பொது சேவை அனுமதிப்பத்திரங்களை ரயில்வே கவுன்டர்களிலும் எண்பது வீதம் சாலை மார்க்கமாகவும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், வாரண்ட் மூலம் அரசு ஊழியர் முன்பதிவு செய்யும் ஒவ்வொரு இருக்கைக்கும் முன்பதிவு செய்யப்பட்ட அரசு ஊழியரிடம் இருந்து டிக்கெட் கட்டணத்தில் ஐந்து சதவீதத்தை வசூலிக்குமாறும் போக்குவரத்து அமைச்சகம் ரயில்வே பொது மேலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புகையிரத வர்த்தக அத்தியட்சகர் சந்திரசேன பண்டார இதற்கான திட்டங்களை தயாரித்துள்ளதாகவும், இது அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை குறைப்பதாகவும், இதற்கு தமது தொழிற்சங்கம் கடும் எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் திரு.சுமேத சோமரத்ன தெரிவித்தார். .
ஆன் லைனில் ரயில் இருக்கைகளை முன்பதிவு செய்யும் போதும் பல பயணிகள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்றும், இதனால் அரசு ஊழியர்கள் தாராளமாக ரயில் நிலையத்திற்குச் சென்று இருக்கைகளை முன்பதிவு செய்ய முடியாமல் போவதாகவும் தலைவர் கூறுகிறார்.
மேலும், ரயில்வே இருக்கைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்வதில் ஒரு மாஃபியா செயல்படுவதாகவும், பொது சேவை உரிமங்களை ஆன்லைனில் வழங்குவதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறிய நிவாரணம் இழக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில், புகையிரத நிலையங்களில் பொது சேவை அனுமதிப்பத்திரங்கள் மூலம் புகையிரத ஆசனங்களை வழங்குவதில் முறைகேடுகள் இடம்பெறுவதாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் அடிப்படையில் பொது சேவை ஆசன முன்பதிவுகளை இணையத்தில் மேற்கொள்ளுமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொது முகாமையாளர் (போக்குவரத்து) ஜகத் இடிபோலகே தெரிவித்தார்.
வரும் 14ம் தேதி முதல் இந்த முறை மூலம் இடங்களை முன்பதிவு செய்வது கட்டாயமாகும் என்றும் அவர் கூறினார்.
ஆசனங்களை முன்பதிவு செய்யும் போது, ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு ஆன்லைனில் சென்று பொது சேவை உரிம எண் உள்ளிட்ட தகவல்களை உள்ளீடு செய்து, OTP எண்ணுடன் ரயில் நிலையத்திற்குச் சென்று டிக்கெட்டைப் பெற வேண்டும் என்று துணைப் பொது மேலாளர் மேலும் தெரிவித்தார்.
-வாசகம் news- “ என கடந்த மாதம் 13 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (13.03.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
புகையிரத திணைக்களத்தினால் அரச ஊழியர்களுக்கு Railway Warrant மூலம் பயணச்சீட்டுக்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், அதற்கு எவ்விதமான கட்டணமும் வசூலிக்க தீர்மானிக்கப்படவில்லை எனவும், அவ்வாறு கட்டணம் அறவிடப்படும் என பரவும் தகவல் போலியானது என்று ? who is he?? இதிபோலகே தெரிவித்தார்.
புகையிரத திணைக்களத்தின் ஆசனங்கள் முன்பதிவு முறையை ஆய்வு செய்ததில், அரசு ஊழியர்களுக்கு உரிமம் வழங்கும் முறையும் அதில் ஏற்படுத்தப்பட்டுள்ளமை காணக்கிடைத்தது.

அதனை ஆய்வு செய்த போது, அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் முதலில் உரிய ரயில்வே வாரண்ட்டைப் பெற வேண்டும், அதன்பிறகு குறித்த வாரன்டின் தகவல் முதலில் வழங்கப்பட வேண்டும், பின்னர் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பயண விவரங்களை உள்ளிட்டு இருக்கைகளை முன்பதிவு செய்ய வாய்ப்புள்ளது.
நாம் தொடர்ந்து மேற்கொண்ட தேடலில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தாளில் அல்லது அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் இலவச ரயில்வே அனுமதிப்பத்திரத்திற்கு சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குறிப்பிடப்படவில்லை. இங்கே விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்.
இந்த புதிய ஆன்லைன் புகையிரத ஆசன முன்பதிவு முறை பற்றி மொபிடெல் திட்ட அதிகாரியிடம் கேட்டோம். இந்த புதிய ஆன்லைன் முறையின் மூலம் அரசாங்க ஊழியர்களுக்கு புகையிரத வாரண்ட் ஒதுக்குவதற்கான வாய்ப்புக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று எமக்கு உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், புதிய முறையின் மூலம் வாரண்ட் உரிமம் பெற்று நேரடியாக புகையிரத டிக்கெட் வழங்கும் வாய்ப்பு தற்போது இல்லை. இங்கு தற்காலிக முன்பதிவு மட்டுமே உள்ளது. முன்பதிவை உறுதி செய்ய, உரிய காலக்கெடுவுக்குள், அதை உறுதிசெய்யக்கூடிய புகையிரத நிலையத்திற்குச் சென்று முன்பதிவு விவரங்களுடன் வாரண்ட்டை வழங்குவதன் மூலம் உறுதி செய்யலாம்.
நாட்டில் ஓய்வூதியத் துறை மட்டும் கணினி மயமாக்கும் முறையைத் தொடங்கினாலும், மற்றைய அரசு ஊழியர்களின் உரிம விவரங்களை இணையத்தில் பெறும் கணினி மயமாக்கப்பட்ட முறை தற்போது நடைமுறையில் இல்லாததே இத்தகைய புகையிரத முன்பதிவு முறை அமல்படுத்தக் காரணம் என தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அரச நிறுவனம் அல்லது பிரதேச செயலாளரின் ஒப்புதல் உள்ளிட்ட முறைகள் மூலம் முதலில் வாரண்ட் உரிமத்தைப் பெற்று, புகையிரத திணைக்களத்தின் ஆன்லைன் இருக்கை முன்பதிவு அமைப்பில் பயணிகளின் மற்ற பயண விவரங்களை உள்ளிடுவதன் மூலம், தற்காலிக ரயில் இருக்கை முன்பதிவை மேற்கொள்ளும் வசதி மட்டுமே புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அமைப்பு மூலம் கிடைக்கும்.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அமைப்பு மூலம் 100% டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியினால் வாரண்ட் உரிமம் பெற்றவர்கள் ஆசனங்களை முன்பதிவு செய்யும் வாய்ப்பை இழக்கும் சிக்கலைத் தவிர்க்கவே இவ்வாறான முறையை அறிமுகப்படுத்தியமைக்கான காரணம் என மொபிடெல் நிறுவன அதிகாரி விளக்கமளித்ததார்.
மேலும், புதிய ஆன்லைன் முறைக்கு, புகையிரத திணைக்களத்தினால் அல்லது அரசிடம் இருந்து எவ்விதமான கட்டணமும் இல்லை, அத்துடன் புகையிரத பயணிகளிடம் இருந்து ஆசனப்பதிவுக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது, இதுவும் முந்தைய ஆன்லைன் முறை மூலம் செய்யப்பட்டது என மொபிடெல் திட்ட அலுவலர் விளக்கம் அளித்தார்.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அரச ஊழியர்களுக்கான புகையிரத ஆசன முன்பதிவு அனுமதிப்பத்திரங்களுக்கு கட்டணம் அறவிடப்படும் என இணையத்தில் பரவிய தகவல் தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட விரிவான ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:அரச ஊழியர்களுக்கான புகையிரத ஆசன முன்பதிவு அனுமதிப்பத்திரங்களுக்கு கட்டணம் அறவிடப்படுமா ?
Fact Check By: S.G.PrabuResult: Misleading


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team