
INTRO :
வாகன பதிவு சான்றிதழ் இன்றி மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியாதா என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “வாகன பதிவு சான்றிதழ் இன்றி மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியாதா? l சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ. “ என இம் மாதம் 22 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (22.05.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் குறித்த வீடியோவை ஆய்வு செய்தபோது, இணையத்தில் பரவி வருகின்றதை போன்று வாகன பதிவு சான்றிதழ் இன்றி மாகாணங்களுக்கு இடையே வாகனத்தினை செலுத்த முடியாது என தெரிவிக்கவில்லை. குறித்த நபர் செலுத்திய வாகனத்தின் உரிமம் மாற்றல் செய்யப்பட்டு இல்லாதமையினை தொடர்பில் வழக்கு பதிவதாக குறித்த பொலிஸ் அதிகாரி தெரிவிக்கின்றமை காணக்கிடைத்தது.
இது தொடர்பாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் விளக்கமளித்துள்ளார்.
அதில், ‘’கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிந்தெனிய பொலிஸ் நிலையத்தில் அவிசாவளையில் இருந்து கலிகமுவ வரையான வீதியில் பரிசோதனையில் பணியில் இருக்கும் போதே குறித்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
சோதனையின் போது முச்சக்கர வண்டிக்கான வருமான அனுமதிப்பத்திரம் ஒருவரின் பெயரிலும் அதன் காப்புறுதி சான்றிதழ் வேறொருவரின் பெயரிலும் இருந்தது,’’ என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகிறார்.
குறித்த சாரதி இந்த இரண்டு பெயர்களிலும் குறிப்பிடப்பட்ட நபர் அல்ல. அதேபோல், அவரிடமிருந்த மூன்று வருவாய் உரிமம் பத்திரத்தின் இருந்த முகவரியும், வாகன காப்பீட்டு சான்றிதழில் இருந்த முகவரியும், வாகனத்தினை செலுத்திய சாரதியின் முகவரியும் வெவ்வேறாக இருந்ததாக தெரிவித்தார்.
முச்சக்கரவ ண்டியின் உரிமை மற்றும் சாரதி ஆவணங்கள் பல பெயர்களில் இருப்பதுடன் முச்சக்கர வண்டியின் உரிமையாளரிடம் எவ்வித ஆவணங்களும் இல்லை என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த பொலிஸ் அதிகாரி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அதன்பிறகு, முறையான பதிவு செய்யப்பட்ட உரிமையை ஒப்படைக்காததற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் போது, இந்த முச்சக்கரவண்டி அவர் பயன்படுத்திய முச்சக்கரவண்டி எனவும், அவர் கொள்வனவு செய்ததாகவும், ஆனால் வாகனம் அவரது பெயரில் பதிவு செய்யப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. அதன் காரணமாக அவர் குறித்த வழக்கில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். நீதிமன்றம் ரூ. 5000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ, கடந்த காலங்களில் பல்வேறு வகையான வாகனக் கொள்ளைகள் மற்றும் முச்சக்கரவண்டி திருட்டுகள் அதிகளவில் பதிவாகியிருந்ததாகவும், கடந்த வருடம் வாகனத் திருட்டு தொடர்பாக, குறிப்பாக ‘நீதி’ நடவடிக்கையின் கீழ் 1400 பேர் பதிவாகியுள்ளதாகவும், இதுபோன்ற சந்தேகத்திற்குரிய சம்பவத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது, என தெரிவித்தார்.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், வாகன பதிவு சான்றிதழ் இன்றி மாகாணங்களுக்கு இடையே பயணிக்க முடியாது என பரவிய தகவல் தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளது
இது தொடர்பாக எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:வாகன பதிவு சான்றிதழ் இன்றி மாகாணங்களுக்கு இடையே பயணிக்க முடியாதா?
Fact Check By: S.G.PrabuResult: Misleading


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team